Skip to main content

என்.எல்.சி பாய்லர் விபத்து: மேலும் ஒருவர் பலி!

Published on 10/05/2020 | Edited on 10/05/2020

 

 Cuddalore - Neyveli - nlcblast issue

 

நெய்வேலி 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு பணியாளர் உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா,  தமிழ்நாடு, புதுச்சேரி என தென் மாநிலங்களின்  மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது.


இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (07.05.2020) மாலை, இரண்டாவது அனல் மின் நிலையத்தின் அலகு 6-ல் நிலக்கரி எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததில் நிரந்தர, இன்கோசர்வ் மற்றும்  ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் நிரந்தர ஊழியர் சர்புதீன் (53) என்பவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8-ஆம் தேதி  உயிரிழந்தார். தற்போது மேலும் ஒரு பணியாளர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.     

 

 

சார்ந்த செய்திகள்