கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் அருண்பிரசாத்(21), அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரின் மகன் குமார்(25).
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lit.jpg)
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கடலூர் அருகே உள்ள சொத்திகுப்பம் முகத்துவாரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் செல்போன் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். அங்கிருந்தவர்கள் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow Us