Skip to main content

பாலியல் தொல்லை கொடுத்த கணவன்; தோழியுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய மனைவி

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

cuddalore kullanchavadi village husband and wife incident with her friends involved

 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த த.பாளையம் பொன்னையன் குப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவரது வயலில் நேற்று முன்தினம் (31.05.2023) காலையில் வேலைக்கு சென்றவர்கள் அப்பகுதியில் பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதை அறிந்து துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என தேடிப் பார்க்கும் போது ஒரு ஆண் சடலம் இறந்து அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் ரங்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர்  குள்ளஞ்சாவடி காவல்  நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குள்ளஞ்சாவடி போலீசார் பிரேதத்தை கைப்பற்றினர்.மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள்,  மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.

 

மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர் வடலூர் பார்வதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மணி என்பவரது மகன் ராஜசேகர் (வயது 34) என்பதும், அவர் கட்டிட வேலை வேலை செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருப்பதும் தெரியவந்தது. மேலும் மஞ்சுளா கோடை விடுமுறையில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடலூர் பச்சங்குப்பத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு ராஜசேகர் அவருடைய அம்மாவிடம் ' கடலூரில் உள்ள மனைவி, பிள்ளைகளை பார்த்து வருகிறேன்' என கூறிவிட்டு வடலூரில் உள்ள பைக் ஸ்டேண்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் 3 நாட்களாக வீட்டுக்கு வரமால் இருந்த மகன் கரும்புத் தோட்டத்தில் இறந்து கிடக்கிறார் என்ற தகவல் தெரியவரவே ராஜசேகரின் தாயார் பானுமதி, 'தன் மகன் சாவில் சந்தேகம்' இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? தற்கொலையா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

cuddalore kullanchavadi village husband and wife incident with her friends involved
மஞ்சுளா - வினோதினி

இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ராஜசேகரின் மனைவி மஞ்சுளாவை நேற்று காலை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் மஞ்சுளாவிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ராஜசேகரும், மஞ்சுளாவும் காதலித்து  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு 3 பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தனர். ராஜசேகருக்கு அதிகப்படியான குடிப்பழக்கமும், வேறு பெண்களுடன் தகாத உறவுகளும் இருந்துள்ளது. மேலும் மஞ்சுளாவின் விருப்பத்துக்கு மாறாக அவரிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மஞ்சுளா பலமுறை தனது கணவரிடம் எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை. மேலும் அடிக்கடி மது அருந்திவிட்டு அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனால் ராஜசேகரின் செயல்பாடுகள் பிடிக்காமல் தாய் வீட்டில் இருந்து வந்த மஞ்சுளா தனது நெருங்கிய தோழியான தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வினோதினியிடம் கூறியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து மஞ்சுளா, வினோதினி இருவரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ய முடிவு செய்து வினோதினி கணவர்  சசிக்குமாரிடம் கூறினர். இதையடுத்து  உதவிக்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த நடராஜ் மகன் மோகன் (வயது32) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டி சேடப்பாளையத்தில் உள்ள மருந்து கடையில் களைக்கொல்லி மருந்து வாங்கி, மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து விடலாம் என திட்டம் தீட்டினர். இதையடுத்து கடந்த 27_ஆம் தேதி மஞ்சுளா ராஜசேகருக்கு போன் செய்து தொண்டமாநத்தத்தில் உள்ள வினோதினி வீட்டிற்கு வரவழைத்து சசிக்குமார், மோகன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த மது பாட்டிலில் விஷம் கலந்து த.பாளையம் கிராமம் அருகே உள்ள பொன்னையன் குப்பத்தில் கரும்பு தோட்டத்திற்கு ராஜசேகரை அழைத்துச் சென்று இவர்கள் இருவரும் குடிப்பது போன்று நடித்து ராஜசேகரை குடிக்க வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்த ராஜசேகர் இறந்ததை உறுதி செய்து கரும்புத் தோட்டத்திற்குள் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

 

cuddalore kullanchavadi village husband and wife incident with her friends involved
சசிகுமார் - மோகன்ராஜ்

இதுகுறித்து குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், மற்றும் போலீசார் ராஜசேகர் மனைவி மஞ்சுளா(32), இவரது தோழி வினோதினி (30), வினோதினியின் கணவர் சசிக்குமார்(39), இவர்களது நண்பர் நடராஜ் மகன் மோகன்(32) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கூட்டாளிகளுடன் சேர்ந்து கணவரை மனைவி கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.