Skip to main content

பாசன வாய்கால் தூர்வாரபடாமல் முறைகேடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்ட குமராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பாசன வாய்கால்களில் தூர்வாரமல் தூர்வாரியதாக ஆளும் கட்சியினர் முறைகேடு செய்துள்ளதை கண்டித்தும். 2016-17, 2017-18 ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து விடுபட்டவர்களுக்கு காப்பீடு தொகையை வழங்க வேண்டும், குமராட்சி வேளாண் அலுவலகத்திற்கு வரும் வேளாண் இடுபொருட்கள், உழவு கருவிகள், விதைகள் அரசு திட்டத்தின் கீழ் வர கூடிய மானியம் உள்ளிட்ட அனைத்தையும் ஏழை, எளிய, நடுத்தர, குத்தகை, போக்கியம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குமராட்சி வேளாண் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CUDDALORE KATTUMANNARKOIL DID NOT CLEAN WATER WAVE ROUTE


சங்கத்தின் குமராட்சி ஒன்றிய தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்டத்துணைச்செயலாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் கற்பனைச்செல்வம், துணைச்செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மணிவண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து கோசங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து குமராட்சி வேளாண் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.