Skip to main content

பத்திரிகையாளர்களை சிறை வைத்த இன்ஸ்பெக்டர்.

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி. இவர் வேப்பூர் காவல் நிலையைத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் உள்ளார். வேப்பூர் அருகேயுள்ள அரியநாச்சி என்ற ஊரில் கோயில் பிரச்சினையில் இரு தரப்பினருக்குள் கோஷ்டி பிரச்சினை உள்ளது. இதற்காக வேப்பூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் கொடுத்தும் போலீஸ் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினையை தீர்க்காததால் 13- ஆம் தேதி காலை 10 மணியளவில்ஒரு தரப்பை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட் ஆண்கள் பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசை கண்டித்து தீடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

 

cuddalore reporters arrest in insepctor

 

 

இந்த தகவல் கேள்விப்பட்ட தினசரி பத்திரிகை செய்தியாளர்கள் இருவர் ஆர்ப்பாட்டத்தை படம் எடுத்தனர். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட போலீசார் ஆகியோர் கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். அதை படம் எடுத்த அந்த இரு பத்திரிகையாளர்களிடம் ஓடிய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி உங்களை யார் படம் எடுக்க சொன்னது என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி கொண்டே அவர்கள் கையில் இருந்த கேமரா செல்போன்களை பிடிங்கியுள்ளார்.

 

 

cuddalore reporters arrest in insepctor

 

 

அதை ஒரு நிருபர் தடுத்துள்ளார். இதனால் வீராவேசமான இன்ஸ்பெக்டர் இவன்களை அரஸ்ட் செய்து லாக்கப்பில் போடு என்று கடும் கோபமாக உத்தரவிட, பாய்ந்து சென்ற காவலர்கள் நிருபர்களை குண்டு கட்டாக தூக்கி கொண்டு போய் லாக்கப்பில் போட்டனர். விஷயம் தீயாய் பரவியதும் விழுப்புரம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகை ஊடக நண்பர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். விஷயத்தை டிஎஸ்பி. தீபா சத்தியன், எஸ்பி அபிநவ் ஆகியோரிடம் கொண்டு சென்றனர் பத்திரிகை ஊடக அமைப்பினர். இதையடுத்து இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் பேசியுள்ளனர். அவர்களோடு மோதல் போக்கு வேண்டாம் என்று சொல்லியுள்ளனர். ஐஜியே சொன்னாலும் ஏற்க மாட்டேன். அவர்கள் இருவரையும் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவேன் என்று இருந்தார்.

 

 

cuddalore reporters arrest in insepctor

 

 

 

20க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் இருக்கும்போது பெண் இன்ஸ்பெக்டர் பத்திரிகையாளர்கள் கையில் உள்ள செல்போனை ஆத்திரத்தோடு ஓடி போய் ஏன் பிடுங்க வேண்டும்? பொதுவாக போராட்டத்தின் போது பெண்களை கைது செய்ய பெண் காவலர்கள் தான் ஈடுபட வேண்டும். ஆண் காவலர்கள் ஈடுபட்டால் விபரீதமான பிரச்சினை வரும். இப்படிப்பட்ட அடிப்படை விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல் பெண் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி இருக்கிறார் என்று பத்திரிகையாளர்கள் விவாதம் செய்த பிறகும், இன்ஸ்பெக்டர் விடிவாதம் செய்ய பொருமை இழந்த பத்திரிகை ஊடகத்தினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் சேர்ந்து ஆதரவு தர திடீர் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக முடிவெடுத்தனர். இதை அறிந்த அதிகாரிகள் பிரச்சினை பெரிதாகக் கூடாது என்று மாவட்ட எஸ்பி. அபினவ் இருவர் மீதும் சிஎஸ்ஆர் பதிவு செய்ய சொல்லி பிறகு பத்திரிகையாளர்களை மாலை 4 மணியளவில் விடுதலை செய்தனர். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு எதிராக பத்திரிகை ஊடகத்தினர் மற்றும் அனைத்து கட்சி பொது நல அமைப்பினர் தீவிர போராட்டத்தில் இறங்க உள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.