Skip to main content

புதுமணப்பெண் தற்கொலை...கணவன் மீது பெண் வீட்டார் புகார்!!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பாவாடைசாமி, அஞ்சா ஜெயக்கொடி இவர்களின்  மகன் பாவேந்தன் என்பவருக்கும் கடலூர் மாவட்டம் சுப உப்பலவாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன், சாந்தி இவர்களின் மகள் சபீனா என்பவருக்கும் கடந்த 23.1.2019 திருமணம் நடைபெற்றது.
 

cuddalore incident



வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டார்கள் வெள்ளி 1 கிலோ, 50 பவுன், ஆடம்பரப் பொருட்கள், ரொக்கப்பணம் 2 லட்சம், இவையெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. திருமண நாளன்று மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பொருட்கள் பவுன், வெள்ளி இவையெல்லாம் கொடுத்து விட்டார்கள். அந்த நேரத்தில் வரதட்சணையாக மாப்பிள்ளை விட்டார்கள் கேட்ட 2 லட்சம் பணம் மட்டும் கொடுக்க முடியவில்லை.

திருமணம் நடந்தது 20 நாட்கள் மட்டுமே பாவேந்தன் சபீனா உடன் வாழ்ந்து வந்தார். சில நாட்களில் 2 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினார். இந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை இரண்டு லட்சம் பணம் கேட்டதை சபீனா அவர் தாயாரிடம் என் கணவர் பணம் கேட்கிறார் என்று சொன்னார். அதற்கு அவரது தாயார்  உடனே வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போ என்று சபீனா தாயார் கூறியுள்ளார். சபீனா  பணம் வாங்குவதற்காக தாயார் வீட்டிற்கு சபீனா  வந்த சில நிமிடங்களில் கணவர் பாவேந்தன் சபினாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இனிமேல் என் வீட்டுக்கு நீ வரக்கூடாது என்று சம்பந்தம் இல்லாமல் பாவேந்தன் பேசினார்.

பாவேந்தன் கைபேசியில் சபீனாவிடம் பேசும் பொழுது சபீனா தாயார் அருகில் இருந்ததால் பேசியதை காதில் வாங்கி உடனே சபீனா குடும்பத்தார்கள் பெரியகுப்பம்  பாவேந்தன் வீட்டிற்கு சென்று குடும்பத்தாரிடம் "உங்கள் மகன் என் மகளிடம் தொலைபேசியில் பேசியது சரி தானா என்று கேட்டார்" அதற்கு பாவேந்தன் உறவினர்கள் அதற்கு உரிய பதில் சொல்லாமல். சபீனா குடும்பத்தாரை தரக்குறைவாகவும் ஆபாச வார்த்தைகள் பேசி சபீனா குடும்பத்தாரை பெரியகுப்பம் கிராமத்தை விட்டு விரட்டி அடித்து விட்டார்கள்.

சபினா தாயார் மகளை வாழவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாவேந்தன் மீது புகார் கொடுத்தார்கள். புகாரின் அடிப்படையில் இருதரப்பினரையும் வரவழைத்து ஆய்வாளர் விசாரணை  மேற்கொண்டார்கள். சபீனா "என் கணவரோடு என்னை சேர்த்து வையுங்கள் என்று கண்ணீர் விட்டு காவல் நிலையத்தில் பாவேந்தன் காலில் விழுந்து கதறினார்.  ஆனால் பாவேந்தன் " இந்த பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள்" என்று கூறினார். 

மீண்டும் ஒரு மாதம் கழிந்து விசாரணை நடந்தது. சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடைபெற்றது. அந்த மறு விசாரணையில் பாவேந்தன் "நான் நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடிக் கொள்கிறேன்" என்று காவல்துறை ஆய்வாளரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆய்வாளர் அடுத்தகட்டமாக இருவரையும் சேர்க்க முயற்சித்து கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலரிடம் பரிந்துரை செய்து உள்ளார். இப்படி இருக்க சபீனா நம் வாழ்க்கை சீரழிந்து விட்டது என்ற எண்ணத்தில் சபீனா  தனக்குத் தானே கேள்வி கேட்டபடி சாப்பிடாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். சபீனா தாயாரும் தினமும் தன் மகள் நிலையைக் கண்டு அழுது கொண்டிருக்கும் காட்சியை  பார்த்த சபீனா  துயரம் தாங்க முடியாமல் 30.09.2019 மாலை 6 மணி அளவில் எலி மருந்து சாப்பிட்டார். 


கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் , அங்கு சிகிச்சை அளிக்க முடியாதபட்சத்தில்  மருத்துவர் ஆலோசனைப்படி பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அங்கும் பார்க்க முடியாத நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை கொடுத்தும் சிகிச்சை பலனின்றி 5.10.2019 மாலை 5.30 மணி அளவில் இவர் உயிர் பிரிந்தது. சபீனா உயிருக்கு காரணமான பாவேந்தன்ணை கைது செய்து தண்டனை பெற்று தருமாறு சபீனா பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். இந்த புகார் கடலூர் துணை கண்காணிப்பாளர் திருமதி சாந்தி DSP அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்படும் நடந்து கொண்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.