Skip to main content

ஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவலில் சிறை!

Published on 27/10/2020 | Edited on 28/10/2020

 

cuddalore incident

 

கடலூர் மாவட்டம் சாத்தமாம்பட்டு, பஞ்சன் மகன் விஜய் என்பவர் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது தந்தை பஞ்சன்(47) என்பவர் சாத்தமாம்பட்டு பூவராயர் முந்திரிதோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.

 

அவர் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். இவ்வழக்கை நெல்லிக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி விசாரணை மேற்கொண்டதில் பஞ்சன் சசிக்குமாரிடம் மது வாங்கி குடித்துவிட்டு அவரை பற்றியே ஊரில் தவறாகப் பேசி வருவதாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு தனது நண்பர் ஜெயபிரகாஷ் உடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் ஒத்துக்கொண்டனர். 


அதனடிப்படையில் சாத்தமாம்பட்டு மேற்குத் தெரு மாசிலாமணி மகன் சசிகுமார்(28), சிலம்பிநாதன்பேட்டை செஞ்சிவேல் மகன் ஜெயபிரகாஷ் (எ) பிரகாஷ் (25) ஆகிய இருவரும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சசிக்குமார் மீது காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இருவரின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் இருவரும் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

 

இபோல் கடந்த 08.10.2020 அன்று  வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் மது கடத்தலை தடுக்கும் வகையில் சிறுபாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பெரியாயி அம்மன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுபாக்கம் அடுத்த சித்தேரி, வடக்குத் தெருவைச் சேர்ந்த ராயபிள்ளை என்பவரின் மகன் மருதமுத்து (27) என்பவர் 120 லிட்டர் சாராயம் வைத்திருந்ததால் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ள நிலையில் இவரின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

 

இதனிடையே புதுச்சேரி மாநிலம், வில்லியனூர், மணவெளியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ஜாக்(எ)ஜெகன்(32) என்பவர் கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த நல்லாத்தூரைச் சேர்ந்த தனசேகரன் என்ற இரும்பு வியாபாரியை மிரட்டி 50,000 பணம் பறித்ததாக தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 13-ஆம் தேதி புகார் செய்திருந்தார்.

 

cnc

 

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருந்தபடி பணம் கேட்டு மொபைல் போனில் மிரட்டியதாக முக்கிய குற்றவாளியான ஜாக் என்கிற ஜெகன் கைது செய்யப்பட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகாமூரி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்தப்பட்டார். இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான மதன் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் நான்கு பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.