Skip to main content

புதுசத்திரத்தில் சுருக்குமடி வலையில் பிடித்த 20 டன் மீன்கள் பறிமுதல்

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
CUDDALORE

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடித்த 20 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்களை பிடிக்கக்கூடாது என மீனவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு உள்ளது.  அதையும் மீறி சிலர் கடந்த காலங்களில் மீன் பிடித்ததால் அந்த பகுதியில் தொடர் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

 

CUDDALORE


இந்த நிலையில் அந்த பகுதியிலுள்ள சில மீனவர்கள் சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க வியாழனன்று கடலுக்குச் சென்றனர். இதனை அறிந்த சுருக்குமடி மீன்வலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நாகேஸ்வரனுக்கு தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் சுருக்குமடி வலையில் பிடித்த மீன்களை மீனவர்கள் 7 வாகனம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எடுத்துச்சென்றனர்.  இந்த நிலையில் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் அமுதா மற்றும் காவல்துறையினர் உதவியுடன் 7 வாகனங்களையும் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அனைத்து வாகனங்களையும் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த மீன்கள் ஏலத்தில் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை மீனவர்கள் திருமூர்த்தி, சிவா, தமிழன்பன் ஆகிய 3 பேர், பறிமுதல் செய்த மீன்களை ரூ3.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்து மீன்களை மீட்டுச் சென்றனர். ஒரே நேரத்தில் 20 டன் மீன்களை பறிமுதல் செய்ததால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.