Skip to main content

கடலூர்: தொடர்மழை காரணமாக செடிகள் சேதம்!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சின்ன கண்டியாங்குப்பம் கிராமத்தில் சிறு, குறு விவசாயிகள் முதல் அதிக நிலங்கள் கொண்ட பெரிய விவசாயிகள் வரை, சுமார் 100 -க்கும் மேற்பட்ட ஏக்கரில் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். அதிக லாபம் ஈட்டக்கூடிய கத்திரிக்காய்  சாகுபடியில் நன்றாக பூக்கள் மற்றும் கத்தரிக்காய் காய்த்து வந்த நிலையில், தொடந்து சில நாட்களாக பொழிந்து வரும் தொடர் மழையால் அனைத்து விவசாயகளின் நிலத்தில் இருந்த, கத்தரிக்காய் செடிகள் தரையில் வேரோடு சாய்ந்ததில், பூக்கள் உதிர்ந்தும், காய்கள் அழுகியதால் விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். மேலும் சாய்ந்த கத்திரிக்காய் செடிகளை, சரி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டாலும்,  அச்செடியானது பழைய நிலைக்குத் திரும்பி, பூக்கள் பூக்குமா என்பது கேள்விக்குறியாகதான் உள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

cuddalore heavy rain agriculture land flood


இதேபோல் விருத்தாசலம் அருகே செல்லும் ஒடையினை சரியாக தூர்வாரததால் 30 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. திருமுட்டம் தாலுக்காவிற்கு உட்பட்ட கீரனூர், மேலப்பாளையூர், மருங்கூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு, நெல் உள்ளீடவைகளை விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகளின் நலனுக்காக திட்டக்குடியில் உள்ள வெலிங்கடன் நீர்தேக்கத்தில் இருந்து வருகின்ற பல்வேறு ஒடைகளில் ஒரு பகுதி வல்லியம், மேலப்பாலையூர், கீரனூர் வழியாக கடந்து இறுதியாக மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிக்கு சென்றடைகிறது. 

cuddalore heavy rain agriculture land flood


தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், வயலில் உள்ள மழைநீர் ஒடையை நோக்கி செல்கிறது. ஆனால் ஒடையை சரிவர தூர்வாரமல் இருப்பதினால் மழை தண்ணீர் செல்லமுடியாமல், சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தமிழக அரசு ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணியில் ஈடுப்பட்டாலும், ஒரு சில அதிகாரிகளின் அலட்சியபோக்கால் கீரனூர், மேலப்பாலையூர், மருங்கூர் கிராமங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

cuddalore heavy rain agriculture land flood


மேலும் குமாரமங்கலம் அருகே மணிமுக்தாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பனையில் தண்ணீர் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் உயருவதாகவும் தனிப்பட்ட ஒரு நபர் தடுப்பனையில் தண்ணீரை தேக்கவிடாமல் திறந்து விடுவதினால், பாசன வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரும் நெற்பயிற்களை மூழ்க அடிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட, ஒடையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.