Skip to main content

மலேசியாவில் மகன், மருமகள், பேத்தி உயிரிழப்பு- அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

 

CUDDALORE DISTRUCT FAMILY INCIDENT IN MALASIYA GOVERNMENT


கடலூர் மாவட்டம், திட்டக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரதாபன் சிங் என்பவரின் மகன் ரவிராஜா (வயது 40). மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், சத்யா (வயது 39) என்பவருக்கும், கடந்த 2011- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  

 

இன்ஜினியர்களான கணவன், மனைவி இருவரும் மலேசியாவில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு குகதாராணி என்ற 5 வயது மகள் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் பகுதியில் டாமன் தோனகா செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று ரவிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஜூலை 16- ஆம் தேதி மனைவி சத்யா, மகள் குகதாராணக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.  

 

இந்நிலையில், ஜூலை 16- ஆம் தேதி சத்யாவின் உடல் நிலை மோசமானது. இதனால் தாய், மகள் இருவரையும் பார்த்துக் கொள்ளவும், உதவி செய்யவும், ஆள் இல்லாததால் சத்தியா மன அழுத்தத்தில் இருந்த நிலையில் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தனது கணவருக்கு செல்ஃபோனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, ஜூலை 16- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணியளவில் தான் வசித்து வந்த 18 ஆவது மாடியிலிருந்து ஐந்து வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

 

இந்த தகவல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவி ராஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவும் சிகிச்சை பலனின்றி நேற்று (24/07/2021) மாலை மலேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பணிக்கு சென்ற மகன், மருமகள், பேரக்குழந்தை வீடு திரும்பாத நிலையில் சடலத்தை கொண்டு வர முடியாத நிலையிலும் அவர்களின் அஸ்தியையாவது கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.