Skip to main content

இரட்டைக் கொலை வழக்கு... குற்றவாளிகள் 10 பேருக்கு ஆயுள் தண்டனை!- கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

cuddalore district youths incident district court judgement

 

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலைய தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ரமேஷ் என்பவரின் மகன்கள் வினோத்குமார் (21 வயது), சதீஷ்குமார் (19 வயது).  இதில் சதீஷ்குமார் பொறியியல் கல்லூரி மாணவர் ஆவர். 

 

கடந்த 21.05.2016 அன்று இவர்கள் இருவரையும் அதே பகுதியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து, வெட்டிப் படுகொலை செய்தது. அதையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்களான லட்சுமணன் (40 வயது), கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டேவிட் தேவராஜ் (26 வயது), சதீஷ் (25 வயது), மேல் அழிஞ்சிப்பட்டு பாலமுருகன் (28 வயது) உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் கொலை சம்பவத்திற்கு முதல்நாள் சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வழியில் நிறுத்திய லட்சுமணன் 'ஏன் வேகமாகச் செல்கிறாய்' எனக் கேட்டு அங்கிருந்த பெண்கள் முன்பாக சதீஷ்குமாரை தாக்கியுள்ளார். இதனால் அவமானமடைந்த சதீஷ்குமார் தனது அண்ணனுடன் சேர்ந்து தன்னை கொலை செய்து விடுவார் என அஞ்சியுள்ளார் லட்சுமணன். இதனால் 10 பேர் கொண்ட கும்பலுடன் அண்ணன், தம்பி (வினோத்குமார் மற்றும் சதீஷ்குமார்) இருவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

 

இந்த இரட்டைக் கொலை வழக்கு கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே ஜாமீனில் வெளி வந்த லட்சுமணன், டேவிட்ராஜ், சதீஷ், பாலமுருகன் ஆகியோர் தலைமறைவாகினர். பின்னர் நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி, வேப்பூர் கோழிச் சந்தையில் பதுங்கியிருந்த லட்சுமணனையும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் செங்கல் சூளையில் பதுங்கியிருந்த இதர மூன்று பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

http://onelink.to/nknapp

 

இந்த வழக்கு விசாரணைகள் நேற்று (30/06/2020) முடிவடைந்து கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணன், டேவிட் என்கிற தேவராஜ், பாலமுருகன், சௌந்தரராஜன், அருண்குமார், சதீஷ், ஆனந்தராஜ், ராஜ்குமார், கணபதி, சுமன் ஆகிய 10 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்த நீதிபதி, கொலைகளை முன்னின்று நடத்திய லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, அனைவரும் ஏக தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பளித்தார்.  

 

மேலும் லட்சமணனுக்கு 7,500 ரூபாயும், மற்ற அனைவருக்கும் 4,500 ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.