Skip to main content

"அ.தி.மு.க. ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராக உள்ளார்கள்"- மு.க.ஸ்டாலின்!

Published on 13/09/2020 | Edited on 13/09/2020

 

cuddalore district virudhachalam former mla dmk mk stalin speech

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், தி.மு.க தீர்மானக்குழு உறுப்பினருமான மறைந்த  குழந்தை தமிழரசன் படத்திறப்பு விழா நேற்று (12/09/2020) மாலை நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

 

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- "விருத்தாசலம் முன்னாள் கழகச் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன், அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராடியவர். சாமானிய மக்களுடன் இரண்டறக் கலந்து, அவர்களின் நலன்களுக்காகப் பாடுபட்டவர். கழகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். பட்டி தொட்டிகளில் எல்லாம் கழகத்திற்கு நற்பெயர் ஈட்டித் தந்தவர். கழகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நேரத்தில், தொகுதி மக்களின் குரல் மட்டுமே அவரது குரலாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

 

எப்போதும் தன் தொகுதி மக்களின் நலத்திட்டங்களைப் பற்றியே யோசிப்பதிலும், அதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடமும், என்னிடமும் வலியுறுத்தி வாதாடி நிறைவேற்றிக் கொடுப்பதிலும் தன்னிகரற்றவர். அந்தப் பகுதியில் ஒரு போராட்டத்தை கழகம் அறிவித்தால், அதில் முதல் ஆளாக நின்று பங்கேற்பார். கைதுக்கு அஞ்சாதவர் அவர். அதனால்தான் அவரது மறைவின் போது, “கழகத்தின் தீரமிகு கொள்கை வீரர்களில் ஒருவரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன்” என்று எனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தேன்.

cuddalore district virudhachalam former mla dmk mk stalin speech

இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களும், முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். கரோனாவில் மக்களை அல்லாட விட்டு விட்டு மாவட்டம் மாவட்டமாக கட்சிக்காரர்களைச் சந்தித்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

 

அவர் ஒரு மாவட்டத்திற்கு சென்று திரும்பிய பிறகு அந்த மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றும் அதிகமாகிறது. அந்த நோயால் இறப்பும் அதிகரித்து விடுகிறது. இந்த லட்சணத்தில்தான் அவரது ஆட்சி இருக்கிறது.

 

அ.தி.மு.க. ஆட்சி இன்று ஒரு மக்கள் விரோத ஆட்சி! மக்களின் உயிரைப் பறிக்கும் ஆட்சி! யார் எப்படிப் போனால் என்ன, கமிஷன் அடிப்பது மட்டுமே நமக்கு முதல் கடமை என்று செயல்படும் அமைச்சர்களையும், முதலமைச்சரையும் கொண்ட ஆட்சி!

 

இன்றைக்கு “நீட்” அரக்கன், ஒவ்வொரு மாணவர்களின் உயிராகப் பறித்துக் கொண்டிருக்கிறது.  அரியலூர் அனிதா, விழுப்புரம் ப்ரதீபா, விழுப்புரம் மோனிஷா, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபஸ்ரீ, சென்னை ஏஞ்சலின், புதுக்கோட்டை ஹரிஷ்மா, நெல்லை தனலட்சுமி, அரியலூர் விக்னேஷ் என நீட் தேர்வால் பலியான மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

 

ஆனால் முதலமைச்சர் பழனிசாமியோ “நீட் தேர்வுக்கு” விலக்களித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வாங்க முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசிடம் கூனிக் குறுகி நிற்கிறார். முதலமைச்சர் பழனிசாமி எதிர்க்க தைரியம் இல்லாமல் முதுகெலும்பைத் தொலைத்து விட்டு நிற்கிறார்.

 

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அவர், அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தைக் கூடச் செயல்படுத்த முடியாமல், கையாலாகாத முதலமைச்சராக தவித்து நிற்கிறார். ஆகவே இந்த ஆட்சி மாணவ,  மாணவிகளுக்கு விரோதமான ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகக் காத்திருக்கிறார்கள்.

 

என்றைக்குத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமைச்சர்களும், முதலமைச்சரும் தங்கள் தொகுதிக்குள் ஓட்டுக் கேட்டுக் கூடப் போக முடியாது. அந்த அளவிற்கு மக்களைத் துயரத்தில், பேரிடரில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆகவே இந்தப் பொல்லாத ஆட்சியைத் தூக்கியெறிந்து விட்டு கழக ஆட்சியை அரியணையில் ஏற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் அந்த வெற்றியை காணிக்கையாக்க நாமெல்லாம் ஒருங்கிணைவோம். வெற்றி பெறுவோம்" என்றார்.

 

இந்த படத்திறப்பு நிகழ்ச்சி விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., கடலூர் எம்.பி. ரமேஷ், பண்ருட்டி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.