Skip to main content

தலைமை ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(63). இவர் விருத்தாசலம் தபால் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி அம்பிகா பெண்ணாடம் அருகே உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அன்பழகன் கடந்த 6ம் தேதி அன்று தனது மனைவியுடன் ஒடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளனர். கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை 03.00 மணியளவில் திரும்பி வீட்டுக்கு வந்துள்ளனர். 

cuddalore district virudhachalam 20-pound jewelry robbery at headmaster's house


அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சமையல் அறையில் இருந்த ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறை மற்றும் பூஜை அறையில்  இருந்த இரண்டு பீரோக்கள் மற்றும் படுக்கையறை கட்டிலில் உள்ள ரேக்குகளும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 6 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அன்பழகன் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
 

அதில் சமையல் அறையில் இருந்த ஜன்னல் கதவை சிறிய கடப்பாரையால் திறந்து, அதிலுள்ள ஜன்னல் கம்பியை கழட்டிவிட்டு, உள்ளே புகுந்துள்ளனர். மேலும் அன்பழகன் வீட்டை பூட்டி விட்டு சென்று வந்ததிலிருந்து பத்து நாட்கள் ஆன நிலையில், எப்போது இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது என்பது குறித்து தெரியவில்லை. இதனால் குழப்பமடைந்துள்ள போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.