Skip to main content

இரண்டு ரவுடிகள் மீது குண்டர் சட்டம்... கடலூர் மத்தியச் சிறையில் அடைப்பு

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

cuddalore


இரண்டு ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால் அவர்கள் உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் இருந்து கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். 
 


உளுந்தூர்பேட்டை தாலுக்கா எலவனாசூர்கோட்டை காவல் நிலைய சரகம் எறையூர் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெரிய கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடந்தது. இதனால் எறையூர் கிராமத்திற்கு கரும்புள்ளி கிராமம் எனப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எறையூர் கிராமத்தில் தொடர் மணல் கொள்ளை, தடைசெய்யப்பட்ட கள்ளத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடுவது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகள் அடிதடியில் ஈடுபடுவது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடந்து வருகின்றன.
 

இது சம்பந்தமாக எலவனாசூர்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் எழிலரசி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் பாலகிருஷ்ணன் மேற்கண்ட இரண்டு கோஷ்டிகள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து குற்றவாளி பட்டியலில் வைத்து காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.
 


மேலும் இரு தரப்பினர் இடையே தொடர்ந்து பகை நீடித்ததால் பொதுமக்களின் அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிரன் குரலா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த வி.எம்.ஆரோக்கியதாஸ் மகன் டேவிட் (எ) டேவிட்ராஜ் மற்றும் சாமுவேல் மகன் மெல்கியூர் (எ) ஜான் மெல்கியூர் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசி மேற்கொண்ட 2 ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்திற்குக் கீழ் உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் இருந்தவர்கள் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.