Skip to main content

அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்திய டிராபிக் ராமசாமி!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

கடலூர் புதுநகர் காவல் நிலையம் அருகே வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று (06/02/2020) மாலை தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தினார். அந்த ஆட்டோவில் 12 பேர் பயணித்த நிலையில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருப்பதாகக் கூறி ஆட்டோ ஓட்டுனரிடமும், பயணிகளிடமும் வாக்குவாதம் செய்தார். அதையடுத்து ஆட்டோவில் பயணித்தவர்கள் அதிலிருந்து இறங்கினர். ஆனாலும் அந்த ஆட்டோவில் கூடுதல் பயணிகள் அமர்வதற்காக, விதியை மீறி அமைக்கப்பட்டிருந்த பலகையிலான இருக்கையை அகற்ற வேண்டும் என வலியிறுத்தவே ஆட்டோ ஓட்டுனர் அந்த பலகை இருக்கையை அகற்றினார்.

cuddalore district share auto high passengers trip stop in traffic ramasamy

இதற்கிடையே இதுபற்றி தகவலறிந்த புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் அங்கு வந்து விதி மீறிய ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
 

இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறும்போது, “ஆபே என்றழைக்கப்படும் ஆட்டோவை ஷேர் ஆட்டோவாக பயன்படுத்த கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றுள்ளேன். நாகப்பட்டினத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் கடலூரில் ஆபே ஆட்டோவில் அதிகமானோர் பயணம் செய்வதை பார்த்தவுடன் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டேன். இது தொடர்பாக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் அளிப்பதுடன் உயர்நீதிமன்றத்திலும் புகார் தெரிவிப்பேன்” என்றார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

Next Story

யார் முதலில் முந்துவது என போட்டி - பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

school vans incident students cuddalore district



பள்ளி வாகனங்கள் ஒன்றையொன்று முந்தும் முயற்சியில் ஒரு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை ஏற்றிக் கொண்டு அப்பள்ளியைச் சேர்ந்த இரு வேன்கள் போட்டிப்போட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 25 மாணவ, மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

இதற்கிடையே பள்ளி வாகன ஓட்டுநர்கள் பொறுப்பின்றி செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி கோ.ஆதனூர் கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.