Skip to main content

விருத்தாசலம் அருகே  தனியார் பள்ளி வகுப்பறையில் 12- ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்! 

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன்- லதா தம்பதியினர். இவர்கள் கடலூர்  சாலையில் பாத்திர கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளன. இவர்களது  பையனான சதீஷ்குமார்(17) என்பவர் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் உள்ள செந்தில் மெட்ரிக்குலேஷன் எனும்  தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

cuddalore district school student incident police


இந்நிலையில் இன்று வழக்கம் போல் காலை 07.00 மணிக்கு பள்ளிக்கு சென்ற சதீஷ்குமார் சிறப்பு வகுப்பு முடிந்த உடன் வகுப்பறையில் மயக்கம் அடைந்து விட்டதாக கூறி அவரது பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த அவனது பெற்றோர்கள் விரைந்து சென்று சதிஷை மீட்டு, அப்பள்ளியின் தாளாளர்க்கு சொந்தமான மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 
 

cuddalore district school student incident police


ஆனால் அங்கு மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறியதாக அவனது தந்தை தெரிவிக்கின்றார். பின்னர் மகனை காப்பாற்ற அலைந்து திரிந்த பெற்றோர்கள் இறுதியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எவ்வித நோயுமில்லாமல் நன்றாக பள்ளிக்கு சென்ற மகன் இறந்தவிட்ட செய்தி கேட்டதும், அவனது பெற்றோர்கள் கதறி துடித்தனர். மாணவனின் பெற்றோர்கள் கதறிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர், ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்டாரா? அல்லது மர்மமான நோயினால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

cuddalore district school student incident police


அதேசமயம் 'அப்பள்ளியில் பணம், பணம் என்று நச்சரிப்பதாகவும், தன்னை போல் பல பெற்றோர்கள் இதே நிலைமைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறி கதறி அழுத சதீஷின் பெற்றோர்கள், தன் மகனின் சாவே இப்பள்ளியில் கடைசியாக இருக்க வேண்டும் என்றும், பள்ளியின் தாளாளர்க்கு சொந்தமான மருத்துவனைக்கு கொண்டு சென்ற போது, முதலுதவி அளித்திருந்தால் தனது மகனை காப்பற்றி இருக்கலாம் என்றும் கதறி துடிக்கின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவன் இறந்த செய்தியால் விருத்தாச்சலம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.