Skip to main content

தந்தை இறந்த நாளில் தாயும், மகனும் தற்கொலை!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

 rented house


தந்தை இறந்த நாளில் தாயும், மகனும் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 


கடலூர் அருகேயுள்ள நத்தப்பேட்டையைச் சேர்ந்தவர் முத்து. விவசாயியான இவர் கடந்த 03.06.2019 அன்று உடல் நலக் குறைவினால் இறந்துவிட்டார். இவரது மனைவி லதா (60). இவரது மகன் சேதுராமன் (25). இவர்கள் இருவரும் கடலூர் நகரிலுள்ள கோண்டூர் சாய் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று முத்துவுக்கு முதலாமாண்டு திதி என்பதால் திதி கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தினர். திதி கொடுப்பது குறித்து வீட்டின் உரிமையாளரிடமும், அக்கம்பக்கம் உள்ளவர்களிடமும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று லதாவின் வீடு பூட்டிக் கிடந்தது. வெகுநேரமாகியும் திறக்கவில்லை.  
 

 


இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் மாடியில் உள்ள லதாவின் வீட்டுக் கதவைத் திறந்து, உள்ளே சென்று பார்த்தார். அப்போது லதாவும், சேதுராமனும் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் விஷபாட்டில் ஒன்று கிடந்தது. எனவே இரண்டு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் இரண்டு பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் காவல்துறை விசாரணை செய்ததில் முத்துவின் மகன் சேதுராமன் வேலைக்குச் செல்லாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிகிறது. மேலும் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த லதா கடன் பிரச்சனையிலும் சிக்கியுள்ளார். அதனால்தான் கணவர் இறந்த அதே நாளில் லதாவும், அவரது மகனும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

http://onelink.to/nknapp


தந்தை இறந்த நாளில் தாயும், மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.