Skip to main content

அ.தி.மு.க அமைச்சர் - எம்.பி ஆதரவாளர்களிடையே மோதல்! அடிதடி மறியலால் பதற்றம்! 

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை உறையூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.   மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினராக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கலந்து கொண்டார்.

 

p

 

அப்போது அங்கு வந்த கடலூர் கிழக்கு  மாவட்ட அதிமுக செயலாளரும்,  தொழில்துறை அமைச்சருமான  எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் எம்.பி  அருண்மொழித்தேவனிடம்,  'நாங்கள் அழைப்பு கொடுத்தால் நீங்கள் வருவதில்லை,  பன்னீர்செல்வம் கூப்பிட்டால் மட்டும் விழாவில் கலந்து கொள்கிறீர்கள்..? நீங்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்கள்.." என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அந்த வாக்குவாதம் அப்போது  உறையூர் கிராமத்தில் சமாதானப் படுத்தப்பட்டது. அனைவரும் கலைந்து சென்றனர்.

 

பின்னர் பண்ருட்டி செல்லும் வழியில் தொரப்பாடி பேரூராட்சி அ.தி.மு.க அலுவலகத்திற்கு சென்ற  பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யாவின்  கணவர் பன்னீர்செல்வம் அவருடைய உதவியாளர் ராம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்தில் புகுந்து கட்சி நிர்வாகிகளை தாக்கிவிட்டு,  அலுவலகத்தை சூறையாடினர்.   இதில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி என்பவர் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

p

 

அதனைத் தொடர்ந்து பண்ருட்டி புதுப்பேட்டை அதிமுக நிர்வாகிகள், பண்ருட்டி முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம்,  அவருடைய உதவியாளர் ராம்குமார்,  கோவிந்தன் மாடு ரமேஷ்,  இராமதாஸ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு தொடர்ந்து உள்ளனர்.   அதையடுத்து இருதரப்பினரும் மாறி மாறி மறியலில் ஈடுபட்டனர். 

 

பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டையில் போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  பின்னர் பண்ருட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் இரு தரப்பினரையும் கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஆளும் கட்சியின் இருதரப்பு கோஷ்டி மோதலால் பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் பதட்டம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன.  இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்திற்கு பணம் கொடுக்காதவர் கழுத்தறுத்து கொலை... புதுமாப்பிள்ளை கைது!

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

The man who did not pay for the wedding was strangled to ... Groom arrested!


பண்ருட்டி அருகே திருமண செலவுக்கு பணம் கொடுக்காத ரேஷன் கடை ஊழியரை புது மாப்பிள்ளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது மாளிகைமேடு என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார். இவர் வல்லத்தில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை வெளியே சென்ற திலீப் குமார் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் அவரது குடும்பத்தினர் தேடி உள்ளனர். ஆனால் பல மணி நேரத் தேடுதலுக்குப் பின்பு வீட்டிற்கு அருகிலேயே உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக திலீப்குமார் கிடந்தார்.

 

மேலும் அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பண்ருட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். செய்யப்பட்ட விசாரணை அடிப்படையில் அரவிந்த் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அரவிந்த் என்ற இளைஞனுக்கு அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் திருமண செலவுக்காக திலீப் குமாரிடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால் திலீப் குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த் திலீப் குமாரை கொலை செய்து அவரிடம் இருந்த நகைகள், செல்போன்களை பறித்தது விசாரணையில் தெரியவந்தது.


 

Next Story

பண்ருட்டி அருகே முந்திரி தோப்பிலுள்ள கோயிலில் விவசாயி அடித்துக்கொலை! 

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

Panruti temple in cashew grove farmer incident

 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள நடுமேட்டுக்குப்பதிலுள்ள  முந்திரி தோப்பின் நடுவே அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஊரணி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.  ஒரு சிலருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கோயிலுக்கு அழைத்துவந்து பூஜை செய்தால் உடல் நிலை சரியாகிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் (09.09.2020) கோயிலில் படையில் வைக்க ஒரு பிரிவினர் கோயிலுக்கு சென்றிருந்தனர். அப்போது கோயில் முன் மர்ம நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு விரைந்துசென்ற போலீசார் இறந்தவர் குறித்து விசாரணை செய்தனர். அவர் நடுமேட்டுக்குப்பத்தை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. 43 வயதாகும் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும்,  விஜயகுமார், விஜயபாரதி என்ற 2 மகன்களும், பிரதீபா என்ற ஒரு மகளும் உள்ளனர். 

 

ஜெயந்தி சாலைவிபத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதனால் மன வேதனையடைந்த ரவி மதுவுக்கு அடிமையாகி,  சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முந்திரி தோப்பிலுள்ள நொண்டி வீரன் கோவிலில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததால் அவரை யாராவது அடித்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

மேலும் கொலை செய்யப்பட்ட ரவியின் சடலம் உடல் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக அடித்து கொல்லப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் கோயில் பூசாரி உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.