ADVERTISEMENT

என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு! 

09:59 AM May 13, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.

ADVERTISEMENT


இந்நிலையில கடந்த (07.05.2020) மாலை இரண்டாவது அனல் மின் நிலையத்தின் அலகு 6- இல் நிலக்கரி எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததில் 8 பேர் பலத்த தீக்காயங்களுடன் என்.எல்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


அதில் கடந்த 08.05.2020 அன்று நிரந்தரத் ஊழியர் சர்புதீன் (53) என்பவரும், 10.05.2020 அன்று சண்முகம் என்ற ஒப்பந்தத் தொழிலாளியும், நேற்று (12.05.2020) இரவு தெற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நிரந்தரத் தொழிலாளி பாவாடை(45) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் அதே விபத்தில் சிக்கிய பாலமுருகன் என்ற ஒப்பந்தத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


2 நிரந்தரத் தொழிலாளி, 2 ஒப்பந்தத் தொழிலாளி என அடுத்தடுத்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததால் சக தொழிலாளர்களும், நெய்வேலி மக்களும் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT