கடலூர்: என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோருக்கு இழப்பீடு வழங்குவதில் இழுபறி! தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

cuddalore district neyveli nlc boiler incident employee

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் மே 07- ஆம் தேதி இரண்டாவது அணு மின் நிலைய பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 6- வது அலகில் பாய்லர் வெடித்தது. இதில் அப்பகுதியில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் உள்பட 8 பேர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் என்.எல்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

cuddalore district neyveli nlc boiler incident employee

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது சர்புதீன் என்ற நிரந்தர தொழிலாளி மே 08- ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சர்புதீன் குடும்பத்துக்கு 15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். இந்நிலையில் இதே விபத்தில் சிக்கிய நாயினார்குப்பம் சண்முகம் என்பவர் நேற்று (10/05/2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒப்பந்தத் தொழிலாளரான சண்முகம் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் மற்றும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் என 300- க்கும் மேற்பட்டோர் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

cuddalore district neyveli nlc boiler incident employee

அதையடுத்து என்.எல்.சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உயிரிழந்த குடும்பத்திற்கு போதிய நிவாரணம் மற்றும் நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று (11/05/2020) காலை 06.00 மணிக்கு ஷிப்ட் வேலைக்குச் செல்லும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்கோர்சர்வ் தொழிலாளர்கள் சுமார் 700- க்கும் மேற்பட்டோர் பணியைப் புறக்கணித்து இரண்டாவது அனல் மின் நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Cuddalore district employees Neyveli NLC INCIDENT
இதையும் படியுங்கள்
Subscribe