Skip to main content

40 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தல்! சார் ஆட்சியர் விசாரணை!!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதனால் கூட்டம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. 

மதுவுக்கு அடிமையானவர்கள் மாற்று போதையைத் தேடி வார்னிஷ், சானிடைஸர் லோஷன் ஆகியவற்றைக் குடித்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. மற்றொருபுறம் கள்ளச்சாராய புழக்கமும் அதிகரித்துள்ளது. குறிப்பாகக்  கடலூரில் மெத்தனால் அருந்திய 3 பேர் நேற்றும், இன்றும் பலியாகினர். 
 

cuddalore district industries inspection govt officers


இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கானதுகண்டான் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் எரிசாராயத் தொழிற்சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இத்தொழிற்சாலையில் இருந்து மர்ம நபர்கள் திருட்டுதனமாக எரிசாராயக் கடத்தலில் ஈடுபடுவதாக சார் ஆட்சியர் பிரவீன் குமார்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  

அதனடிப்படையில் வட்டாட்சியர் கவியரசு,காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவின் மூடப்பட்ட இத்தொழிற்சாலையில் பல்லாயிரக்கணக்கான கொள்ளளவு கொண்டது. வேதியியல் கலந்த தொழிற்சாலைக்குப் பயன்படுத்தப்படும் எரிசாராயம், மருத்து தயாரிப்பதற்கு பயன்படுத்தும் எரிசாராயம் என தரம் பிரிக்கப்பட்ட 40 ஆயிரம் லிட்டர் சாராயம் ராட்சச கொள்கலனில் இருப்பது தெரியவந்தது. 
 

cuddalore district industries inspection govt officers

 

http://onelink.to/nknapp


இதுகுறித்து அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். மேலும் இத்தொழிற்சாலையில் உள்ள சாராயக் கிடங்குகள் மற்றும் அதற்கு உண்டான பாதுகாப்பு பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் எரிசாராயத்தைக் கடத்தி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. 

மேலும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், இத்தொழிற்சாலையில் உள்ள சாராயத்தை, மர்மமான முறையில் நுழைந்து, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எரிசாராயத்தைக் கடத்திச்சென்று ஒரு லிட்டர் சாராயம் 1000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 
 

cuddalore district industries inspection govt officers


ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சார் ஆட்சியர் பிரவீன்குமார், "இரண்டு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட இத்தொழிற்சாலையிலிருந்து, கடத்திச் செல்லப்படும் எரிசாராயத்தை யாரும் அருந்த வேண்டாம் என்றும், வேதியியல் பொருட்கள் கலந்த எரிசாராயம், இரண்டு வருடங்களுக்கு மேல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதை அருந்தினால் விஷத்தன்மை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் அதை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குத் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இத்தொழிற்சாலையில் உள்ள சாராயத்தை அழிப்பது அல்லது பாதுகாப்பது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

லாரியுடன் சிக்கிய 1,425 கிலோ தங்கம்; பறக்கும் படை அதிரடி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
1,425 kg of gold caught with the truck; The Flying Squad is in action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த சிறிய ரக லாரி ஒன்றை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1,425 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, தங்க சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.