அரசு மருத்துவமனை மருத்துவஉபகரணங்களைச் சேதப்படுத்தி,மருத்துவரைத்தகாத வார்த்தையால் திட்டிய கிராம உதவியாளர்மற்றும் அவரது சகோதரிக்குசிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய்த்துறையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது சகோதரி சுஜாதா ஆகிய இருவரும், தமது தந்தை கலியனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, கடந்த2018 ஆம் ஆண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் விஜயவதி என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக்கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது வேல்முருகன் மருத்துவரை ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டியும், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தியும் உள்ளார்.
இதுகுறித்து தலைமை மருத்துவர் சுவாமிநாதன், விருத்தாசலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன், அரசு தரப்பு சாட்சியங்கள் தெளிவாக உள்ளதால் அரசு ஊழியர் வேல்முருகன் குற்றவாளி என உறுதி செய்து, "இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஐந்து ஆண்டுகள்என பத்து ஆண்டுகள்சிறைத்தண்டனையும், மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தியதற்காக7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், வேல்முருகனின்சகோதரி சுஜாதாவிற்கு 1000ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் 10 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அரசு மருத்துவமனையை அரசு ஊழியரே சேதப்படுத்திய வழக்கில்10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.