Skip to main content

தடுப்பூசியால் குழந்தை இறந்ததாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை... பெற்றோர் போராட்டம்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

cuddalore district four year child incident parents police station

 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகேயுள்ள அ.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்- ஹேமலதா தம்பதி, தங்களின் நான்கு வயது குழந்தைக்கு நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (01/07/2020) நடைபெற்ற வாராந்திர முகாமில் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அன்று இரவு குழந்தை அழுதுகொண்டேயிருக்க தடுப்பூசி போட்டதால்தான் குழந்தை அழுகிறது என பெற்றோர் நினைத்துத் தூங்க வைத்துள்ளனர். மறுநாள் அதாவது நேற்று (02/07/2020) காலை எழுந்து பார்த்தபோது அந்தக் குழந்தை எதிர்பாராத விதமாக இறந்து விட்டது. 

 

தடுப்பூசி போடப்பட்டதால் தான் குழந்தை இறந்துள்ளது எனக் கருதி, தடுப்பூசி போட்ட மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியரைக் கைது செய்ய வலியுறுத்தி நடுவீரப்பட்டு காவல் நிலையத்தைப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து கலைந்துச் சென்றனர். 

 

பின்னர் நடுவீரப்பட்டு காவல்துறையினர் குழந்தையின் இறப்பைச் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து குழந்தையின் சடலத்தைக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.