Skip to main content

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்தப் பயிற்சி!  

Published on 18/07/2021 | Edited on 18/07/2021

 

cuddalore district farmers agriculturai training new technology

 

கடலூர் மாவட்டம், நல்லூர் வட்டார தொழில் நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் இயற்கை விவசாயம் பற்றி உழவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

 

பெண்ணாடம் அருகே முருகன்குடி கிராமத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் வட்டார தொழில் நுட்ப மேலாளர்  உமாமகேஸ்வரி, உதவி தொழில் நுட்ப மேலாளர் பி.ரமேஷ் ஆகியோர் தற்காலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், அரசு அளிக்கும் உதவிகள், மானியங்கள், வழிகாட்டு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளித்தனர்.

cuddalore district farmers agriculturai training new technology

இந்த பயிற்சியில் செந்தமிழ் மரபுவழி நடுவம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், முருகன் ஆகியோர் தங்கள் அனுபவங்கள் மற்றும் இயற்கை இடு பொருட்களான பஞ்சகவியம், பூச்சிவிரட்டி தயாரிப்பு மற்றும் செய்முறை பயிற்சி அளித்தனர். மேலும் பல்வேறு இயற்கை விவசாயம் செய்யும் உழவர்கள் இயற்கை விவசாயத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்தனர். இதில், சுமார் 50 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

இந்த முகாமில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மரபு ரீதியாக சாகுபடி செய்யப்பட்ட விளைப் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மரபுவழி விதைகளும், விற்பனைக்காகவும், பார்வைக்காகவும் வைக்கப்பட்டது. 

cuddalore district farmers agriculturai training new technology

மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டும், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற பாரம்பரிய தானிய வகைகளை கொண்டும் உணவு மற்றும் கூல் தயாரிக்கப்பட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.