Skip to main content

கோவிலுக்கு சென்று திரும்பிய குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

cuddalore district chennai trichy highway incident 

 

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அய்யனார்பாளையம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று, இரண்டு லாரிகள், இரண்டு கார்கள் என ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதியதில் ஒரே காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உள்பட 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேப்பூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தில் இறந்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விஜயராகவன் மற்றும் அவரது மனைவி வட்சலா, அவருடைய தாயார் வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு, அதீர்த் என்பது தெரியவந்தது. மேலும், இவர்களின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் விளாங்குடி எனவும், கணவன், மனைவி இருவரும் ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும், கேரளாவில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் செங்கல்பட்டு மாவட்டம் நங்கநல்லூர் செல்லும்போது விபத்து ஏற்பட்டது என்பதும் தெரியவந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்