Skip to main content

மீன்கள் செத்து துர்நாற்றம் வீசிய குளத்தை சுத்தம்  செய்யச் சென்ற நகராட்சி ஊழியர்களுக்கு அருவாள் வெட்டு 

Published on 20/07/2019 | Edited on 20/07/2019


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் அருகில் உள்ள குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது.  கடந்த ஆறு நாட்களாகியும் அதனை அப்புறப்படுத்தவில்லை.  இதனால் செத்த மீன்களில்  புழுக்கள் பிடித்து  துர்நாற்றம் வீசியது. அருகில் இருக்கும்  பள்ளி மாணவிகளுக்கும் அரசு அதிகாரிகள் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் இந்த துர்நாற்றம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.

 

f

 

இதனால் அந்த வழியாக செல்பவர்கள் முகத்தில் துணியை கட்டியவாறு சென்று வந்தனர்.  இதுகுறித்து நகராட்சி ஆணையருக்கு செய்தியாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரும் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த 10 துப்புறவு ஊழியர்களை உடனே அனுப்பிவைத்தார்.

 

f

 

ஊழியர்களும் செத்தமீன்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது குளத்தை குத்தகையெடுத்த ஒப்பந்ததாரர் என்று சிலர் வந்து குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து கத்தியால் வெட்டியுள்ளனர்.

 

கத்தியால் வெட்டியதில் அறிவரசன் உள்ளிட்ட மூன்று துப்புறவு ஊழியர்களுக்கு தலை, கைகளில் வெட்டுவிழுந்துள்ளது. மற்றுவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கத்தி வெட்டில் காயம் அடைந்தவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து சிதம்பரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பணிபாதுகாப்பு இல்லையென்று சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு வாரம்தான் டைம்; 134 இறால் பண்ணைகளுக்கு செக்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Check for 134 shrimp farms; The court gave 6 weeks time

சட்ட விரோதமாகச் செயல்படும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக அரசு மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட வேண்டும் எனப் புகார் எழுந்தது. இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, மத்திய அரசின் கடலோர மீன் வளர்ப்பு ஆணைய சட்டத்தின்படி கடலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இறால் பண்ணைகள் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் மனுதாரர்கள் அமைத்துள்ள இறால் பண்ணைகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. மேலும் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த பண்ணைகளை மூடுவதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,709 பண்ணைகளில் 2,227 இறால் பண்ணைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின்  விண்ணப்பங்கள் தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. 134 இறால் பண்ணைகள் சட்ட விரோதமாக அனுமதி பெறாமல் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சட்ட விரோதமாகத் தமிழகம் முழுவதும் இயங்கும்  இறால் பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும். ஆறு வாரத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். அவ்வாறு மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

Next Story

அரிய வகை மீன்; ஒரே இரவில் கோடீஸ்வரரான மீனவர்

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Fisherman became a millionaire overnight after catching sowa golden fish in Pakistan

 

மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை மீன் சிக்கியதால் ஒரே இரவில் கோடீசுவரரான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

 

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள இப்ராஹிம் ஹைதரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச் என்பவர் கடந்த திங்கட்கிழமை அரபிக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது  தங்க மீன்கள் என்று அழைக்கப்படும் சோவா மீன்கள் ஹாஜி பலோச் வலையில் சிக்கியுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து மீனவர் ஹாஜி பலோச் கரைக்குத் திரும்பிய உடனே கராச்சியில் உள்ள துறைமுகத்தில் அரிய வகை மீனான சோவா மீனை ஏலம் விட்டுள்ளார். அதில் சோவா மீன்கள் 7 கோடி ரூபாய் வரை ஏலம் போனதால் ஹாஜி பலோச் ஒரே இரவில் கோடீசுவரராக மாறியுள்ளார். இந்தப் பணத்தைத் தன்னுடன் கடலுக்கு வந்த 7 மீனவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த அரியவகை சோவா மீன் மிகவும் அரிதானதாகவும், அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் மருத்துவ குணாதிசயங்கள் கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது.