Skip to main content

காட்டுமன்னார்கோயில் பகுதியில் நிபா வைரஸா? மருத்துவ அதிகாரிகள் ஆய்வு

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி ஒன்றியம் செட்டி கட்டளை கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம்( வயது 75). இவர் சமீப காலமாக கேரளாவில் கூலி வேலை செய்து வந்துள்ளார். தற்போது தனது சொந்த ஊரான செட்டி கட்டளைக்கு வந்த ராமலிங்கம் தனது மருமகன் வீடான காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலபூவிழுந்த நல்லூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

 

n

 அங்கு வந்த ராமலிங்கத்திற்கு ஜுரம் காய்ச்சல் அதிகமானதால் அவர் உடனடியாக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு முதலுதவி செய்யப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்  அவரது  ரத்தம் மற்றும்  சிறுநீரை எடுத்து   பரிசோதனைக்காக புனே அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

 

இந்நிலையில் காய்ச்சல் குறையாததால் சந்தேகம் அடைந்த மருத்துவ குழுவினர் அவருக்கு நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா? என்று மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இதனைதொடர்ந்து காட்டுமன்னார்கோயில் அருகே  உள்ள ஆயங்குடி ஆரம்ப சுகாதார மருத்துவர் டாக்டர் முஹம்மது  முஜம்மில் காட்டுமன்னார்குடி வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் உட்பட ஐந்து  பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டு அக்கிராமத்தில் சுற்றியுள்ள கீழ பூவிழுந்த நல்லூர் , செட்டி தாங்கள், ராமகோட்டம், ரெங்கநாதபுரம் மேலபூவிழுந்த நல்லூர்  உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மருத்துவ குழு யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என்பதை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தொற்று தெளிப்பான் மூலம் அப்பகுதியில் நோய் தடுப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.  நிபா வைரஸ் சம்பவத்தால் கிராமபகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நிஃபா வைரஸ் எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 Holidays for schools and colleges for Nipah virus

 

கேரளாவில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.

 

நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நிஃபா வைரஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை போலவே கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் எனவும், முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிஃபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதால் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என ஐ.சி.எம்.ஆர் தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளளார். 

 

தற்போது, உறுதிசெய்யப்பட்ட நிஃபா நோயாளிகளின் தொடர்பு பட்டியலில் 1080 பேர் உள்ளனர். மேலும், இன்று 130 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், கோழிக்கோடு மாவட்டத்தைத் தவிர தொடர்பு பட்டியலில் 29 பேர் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிஃபா வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால் கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய குழு அம்மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறது. 

 

இந்த நிலையில், நிஃபா வைரஸ் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் மையங்கள் ஆகிய அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Next Story

நிஃபா வைரஸ் எதிரொலி; 'வவ்வாலுக்குத் தொல்லை தந்து பறக்க வைக்க வேண்டாம்' - அமைச்சர் அறிவுரை

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Nifa virus echo; 'Don't disturb the bat and let it fly' - Minister advises

 

கேரளாவில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.

 

நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரளா சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

n

 

இந்நிலையில் நிஃபா வைரஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை போலவே கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் எனவும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிஃபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதால் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என ஐ.சி.எம்.ஆர் தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளார். நிஃபா வைரஸால் பாதிக்கப்படுபவரின் வியர்வை, உமிழ்நீர், ரத்தம் போன்றவற்றை தொடக்கூடாது. நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை தர வேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஐ.சி.எம்.ஆர் வழங்கியுள்ளது. அதே நேரம் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்,  'வவ்வாலில் இருந்து தான் நிஃபா வைரஸ் பரவுகிறது. எனவே அவற்றுக்குத் தொல்லை தந்து பறக்க வைக்க வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.