Skip to main content

குற்றவாளிகளை கொண்டு சென்ற போது விபத்தில் மரணம்; உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு 93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

 

 

கடந்த 2013-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தை சேர்ந்த கோபி(34) என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 22.12.2013 அன்று திருட்டு வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து, அவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரே வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

 

c

 

நெய்வேலி அருகே ஊ.மங்கலம் பாலம் அருகில் சென்ற போது எதிரே வந்த மீன் பாடி வண்டி காவல் வாகனம்  மீது மோதியது. இதில் காவல் வாகனத்தில் இருந்த கோபி மற்றும் கைதிகள் காயம் அடைந்தனர். கோபியை மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவ மனையிலும், சேலத்தில் உள்ள பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட காவலர்கள் சிகிச்சை செலவுக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தையும் அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 1-1-2014 அன்று உயிரிழந்தார்.

 

இதுபற்றி ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது தந்தை பாலு, தாயார் பாக்கியம், மனைவி உஷா, மகன்கள் அரிகரன், ஹரீஸ் ஆகியோர் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

வழக்கை விசாரித்த நீதிபதி திலகவதி கோவிந்தராஜன் கோபியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 61 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து இழப்பீடு தொகையை செலுத்தும் தேதி வரை 8 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். அதன்படி உயிரிழந்த உதவி ஆய்வாளர் கோபி குடும்பத்துக்கு இழப்பீடாக 93 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

Next Story

யார் முதலில் முந்துவது என போட்டி - பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

school vans incident students cuddalore district



பள்ளி வாகனங்கள் ஒன்றையொன்று முந்தும் முயற்சியில் ஒரு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை ஏற்றிக் கொண்டு அப்பள்ளியைச் சேர்ந்த இரு வேன்கள் போட்டிப்போட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 25 மாணவ, மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

இதற்கிடையே பள்ளி வாகன ஓட்டுநர்கள் பொறுப்பின்றி செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி கோ.ஆதனூர் கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.