Skip to main content

அனுமதியின்றி ஆழ்துழாய் கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர் 

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் 4 நாட்களுக்கு இறந்த நிலையில் மீட்கப்பட்டான். இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பயன்பாடில்லாமல் முறையாக மூடப்படாமலிருக்கும் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளை உடனடியாக முறையாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 

cuddalore collector warns


இந்நிலையில் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுவதற்கும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார் அன்புச்செல்வன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

"கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் தோண்டுபவர்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சியின் தனி அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மேலும் ரிக் இயந்திரம் வைத்திருப்பவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச்சான்று பெற வேண்டும் என்றும் விதிமுறைகள் ஏற்கனவே உள்ளது. தற்போது பழுதடைந்த ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளை கண்டறிந்து அவற்றை முறையாக மூடப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்படி தனி அலுவலர்கள், ஒன்றிய பணி பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் பழுதடைந்த ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளை ஆய்வு செய்து அவற்றை பட்டியலிட்டு அவை முறையாக மூடப்பட்டு அல்லது மழைநீர் சேமிப்புக்காக பயன்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற உள்ளது. கிராமப்புறங்களில் மூடப்படாமல் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளையும் உடன் மூடப்பட்டு குழந்தைகள் தவறி விழுவதை முற்றிலுமாக தவிர்க்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


அதேசமயம் உரிய அனுமதியின்றி அல்லது விதிமுறைகளை மீறி ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைக்கும் உரிமையாளர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் விதிமுறைகளை மீறி செயல்படும் ரிக் உரிமையாளர்களின் பதிவுச்சான்று மாவட்ட கலெக்டரால் ரத்து செய்யப்படும். அத்துடன் அவர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள் அல்லது தனியார் நிலங்களில் மூடப்படாத ஆழ் குழாய் கிணறுகளை கண்டறிந்தால் உடனடியாக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்". இவ்வாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.