Skip to main content

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு; தடையை மீறி மறியல் போராட்டம்

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

 

சிதம்பரம் அருகே ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகன பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமி மறுக்கப்பட்டது.  தடையை மீறி மறியல் போராட்டம் செய்ததால் அனைவரையும் கைது செய்தனர்.

 

c

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் ஹைட்ரோகார்பன் என்ற அபாய திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதனை கட்சியின் மாவட்ட செயலாளர் டி. ஆறுமுகம் தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் பேரணியை துவக்கிவைத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் சிறப்புரையாற்றினார். இதனைதொடர்ந்து பேரணி தொடங்கிய போது காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்து தடைவித்தது.

 

பின்னர் அனைவரும் இரு சக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று தடையை மீறி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு கிள்ளை கடைத்தெரு பகுதிக்கு வந்து கிள்ளை- பரங்கிப்பேடை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, திமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், ஜெயசீலன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவலிங்கம், மணி, வேல்முருகன், வினோபா, ஜீவா, பரமானந்தம், ஆழ்வார் உள்ளிட்ட கட்சியினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தமிழகத்தில் பாசன நீர் வற்றி போய் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாத சூழல் உள்ளது. அதே போல் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அலைகிறார்கள். இந்த நேரத்தில் விவசாயம், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை தமிழகத்தில் தடைசெய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.  விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

 

மக்களின் உணர்ச்சிகரமான சிறு சிறு போராட்டங்களை அரசு அடக்க முயன்றால் வெகுன்டெழுந்து தூத்துக்குடி சம்பவம் போல் தூப்பாக்கிசூட்டில் முடிந்தாலும் முடியும். தமிழக அரசின் காவல்துறை வேதாந்த நிறுவனத்தின் இதர நிறுவனமாக செயல்படுகிறது. தடைகள் பல விதித்தாலும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.