Skip to main content

தோப்புக்கரணம் போட்டு உறுதிமொழி 

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

தமிழகத்தில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசு 144 தடை உத்தரவை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அமல்படுத்தியது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது 21 நாட்கள் ஊரடங்கில் இருக்குமாறு கூறினார். 

 

 cricket



இதனையொட்டி தமிழகத்திலுள்ள 95 சதவீதமான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே உள்ளனர். இதில்  சிலர் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள திறந்த வெளி மைதானத்தில் 12 பேர் புதன் கிழமை கிரிக்கெட் விளையாடினார்கள். இதனை அறிந்த சிதம்பரம் சரக போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அவர்களை அழைத்து அமர வைத்து வைரஸ் தொற்று குறித்து அறிவுரை கூறினார். பின்பு ஊரடங்கு உத்தரவு உள்ள 21 நாட்களுக்கும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம், தோப்புக்கரணம் போட்டு உறுதிமொழி எடுக்க கூறினார்கள். இதனைத் தொடர்ந்து அனைவரையும் எச்சரித்து  அனுப்பி வைத்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.