Skip to main content

காவிரிக்காக போராடியவர் மீது குண்டர் சட்டம்!

Published on 19/04/2018 | Edited on 19/04/2018


 

Cuddalore


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 10.4.2018 அன்று இரவு கர்நாடக அரசு பேருந்து கடலூரில் மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. இதுகுறித்து கர்நாடக மாநில் பெல்காம் மாவட்டம், அறிமந்திராவை சேர்ந்த  பசவராஜ் என்பவர்  கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
 

அதனடிப்படையில் நாம்  தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், சாமி ரவி, கோண்டூர் ராஜா, சாமியார்பேட்டை தனசேகர், கடலூர் 0T நாராயணன், அழகியநத்தம் சுரேஷ், பச்சையாங்குப்பம் நாராயணசாமி ஆகியோர் சட்ட விரோதமாக ஒன்று கூடி பஸ்ஸை வழிமறித்து,  அசிங்கமாக திட்டியும், பஸ் கண்ணாடியை உடைத்தும், பொது சொத்தை சேதபடுத்தியும், கொலை மிரட்டல் விடுத்ததாக கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் சரவணன் விசாரணை மேற்கொண்டு கைது செய்து, அதன்பின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கடல்தீபன் பொது சொத்தை சேதப்படுத்தியதாகவும், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும்  கூறி கடலூர் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி கடல்தீபனை  குண்டர் தடுப்பு காவலில்  சிறையில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ஒராண்டு மத்திய சிறையில் வைக்கப்பட்டார். 
 

மேலும் அரசு மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவோர் மீது குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்படுவர் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
 

தமிழ்நாட்டு உரிமைக்காக போராடியர்களை குண்டர் எனக்கூறி தடுப்பு காவலில் சிறைப்படுத்துவதென்பது தமிழ்நாட்டு உரிமைக்காக போராடுபவர்களை மிரட்டுவது போன்றது என்றும், பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காக அதற்குரிய சட்ட பிரிவுகளில் கைது செய்து வழக்கு விசாரணை நடைபெறும்போது தடுப்புக்காவலில் சிறைப்படுத்துவது தமிழர் உரிமைக்காக போராடுபவர்களை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசின் சர்வாதிகார போக்கையே பிரதிபலிக்கிறது என தமிழார்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.