Skip to main content

விருத்தாசலம் அருகே 1000 காவலர்களின் பாதுகாப்புடன் ஊர்வலம் வந்த விநாயகர் சிலைகள்! 

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டது. அதையடுத்து, இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் தான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர்கள்  ஊர்வலம் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று நடைபெற்றது. 

CUDDALORE

மங்கலம்பேட்டை  சுற்றியுள்ள கிராமங்களில்  இருந்து 63 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  மங்கலம்பேட்டை நகர் முழுவதும் சுற்றிவிட்டு, இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் ஊர்வலம் சென்றன. அதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதேசமயம் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக கடலூர் மற்றும் விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் தலைமையில் 6 ஏ.எஸ்.பிகள் மற்றும் டி.எஸ்.பிகள், 20 காவல் ஆய்வாளர்கள், 67 உதவி ஆய்வாளர்கள் பார்வையில் 1050 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

CUDDLORE

 

மேலும் விநாயகர் செல்லும் வழியில் மசூதிகள் இருப்பதால், சாலையின் இருபுறங்களிலும், ஒன்றன் பின் ஒன்றாக வந்த  ஒவ்வொரு சிலைக்கும்  காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பின்னர் அனைத்து சிலைகளும் கடலூர் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.