கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் என்சிசி கடற்படை மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 5 மாவட்டத்தை சேர்ந்த 400 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பயிற்சி முகாம் கமான்டென்ட் லெப்டினன்ட் கர்னல் வினோத்குமார், தமிழ்நாடு கடற்படை பிரிவு 5ம் எண் கமாண்டர் தினகரன், துணை முகாம் கமான்டென்ட் சப்லெப்டினன்ட் பிரேம்குமார், சப்லெப்டினன்ட் பாஸ்டின்ஜெரோம் ஆகியோர் பார்வையில் முகாம் ஒருங்கிணைப்பு கடற்படை அதிகாரிகள் செல்வக்குமார், சதீஷ்குமார், வளனார், ராஜராஜன், ஜெயக்குமார், குகன் ஆகியோர் பயிற்சி மாணவர்களுக்கு அளித்தனர்.
இந்த மாணவர்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த துண்ட பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினர். மேலும் ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது.
இந்த முகாமில் 5 மாவட்டங்களை சேர்ந்த 15 பள்ளிகள், மற்றும் 4 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் இன்றுடன்(16ம் தேதியுடன்) நிறைவடைகிறது.