Skip to main content

ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்... தமிழ்நாடு போலீசாருக்கு பதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021
ghj


தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்றுமுதல் (15.09.2021) வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. 

 

இந்நிலையில், தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்    "இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதைத் தவிர்த்துவிட்டு, 9 மாவட்டங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பில் மாநில போலீசாருக்குப் பதில் மத்திய படை சிஆர்பிஎஃப் வீரர்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்