Skip to main content

சிதம்பரம் பகுதியில் முதலைப் பண்ணை; உதவி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த வனத்துறை அதிகாரி

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

l;

 

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓடும் வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் முதலைகள் உள்ளதால் அடிக்கடி இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் முதலைக் கடிக்கு ஆளாகிப் பல பேர் உயிரிழந்துள்ளனர்.  அதேபோல் கால் கைகளை இழந்தவர்களும் சிகிச்சை பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.  

 

இந்த நிலையில் இந்தப் பகுதியில் பிடிக்கப்படும் முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்கரமாரி ஏரியில் விடப்படுகிறது.  இந்த ஏரியில் விடப்படும் முதலை மழை மற்றும் வெள்ள காலங்களில் வெளியேறி குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தஞ்சமடைகிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இது அச்சுறுத்தலாகவே உள்ளது.

 

இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருமலை என்ற தொழிற்கல்வி மாணவர் முதலை கடித்து உயிரிழந்தார். எனவே சிதம்பரம் பகுதியில் பிடிக்கப்படும் முதலையைக் கொண்டு தனியாக சிதம்பரம் பகுதியில் முதலைப்பண்ணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அதற்கான இடத்தை தேர்வு செய்து அளிக்க வேண்டும் என சிதம்பரம் வனத்துறை சரக அலுவலர் சரண்யா சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் ஸ்வேதா சுமனை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.  

 

இவருடன் சமூக ஆர்வலர் செங்குட்டுவன், திமுக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கண்ணதாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த முதலை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
 crocodile entered a house near Chidambaram

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் வசிப்பவர் அப்துல் ரஷீத். இவரது வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவர் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தபோது வீட்டு வாசலில் முதலையைப் பார்த்துள்ளார். முதலையைப் பார்த்து சத்தம் போட்டதால் உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் எழுந்து கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முதலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிதம்பரம் வனவர் பிரபு தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்து 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து முதலையைப் பத்திரமாக சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி ஏரியில் விட்டனர். முதலையைப் பிடித்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். 

Next Story

துரத்திய நாய்; பயந்து தண்ணீரில் இறங்கிய முதலை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
The dog that chased the crocodile; A scared crocodile got into the water

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு, குளம் மற்றும் வாய்க்கால்கள் நிரம்பி வழிகிறது. இதனையொட்டி சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தின் அருகே ஓடும் வாய்க்காலில் அதிகளவு மழை நீர் செல்கிறது.

இந்நிலையில் இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரில் முதலைக்குட்டி ஒன்று அடித்து வந்துள்ளது. இந்த முதலை குட்டி வாய்க்காலின் கரையில் வியாழக்கிழமை மதியம் இரைதேடி படுத்திருந்துள்ளது. இதனை வாய்க்கால் கரையில் வந்த நாய் ஒன்று பார்த்து முதலையை கவ்வி பிடிக்க ஓடியது.  முதலை குட்டி நாய் வருவதை அறிந்து பயந்து போய் வாய்க்கால் தண்ணீரில் இறங்கியது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் வாய்க்கால் மற்றும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் முதலை மற்றும் முதலை குட்டிகள் தங்கி இருக்கும் வாய்ப்பு உள்ளது எனவே பொதுமக்கள் கால்நடைகள் வாய்க்காலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.