/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Park.jpg)
சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி(50) என்பவர் அந்த கிராம பகுதியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றில் குறித்துகொண்டு இருந்தார். அப்போது ஆற்றில் இருந்த இரண்டு முதலைகள் முனுசாமியை தொடை மற்றும் உடலில் பல பகுதிகளில் கடித்து குதறியது. வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டதால் கிராம மக்கள் முனுசாமியை முதலையிடமிருந்து மீட்டனர். பின்பு அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் உயிர் இழந்தார். இது குறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உடற்கூறு ஆய்வுகாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி ராகுல் கூறுகையில் புதன் கிழமை முதலையை பிடிக்க ஏற்பாடுகள் செய்ய உத்திரவிட்டுள்ளதாக கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)