Skip to main content

போலி பில் போட்டால் கிரிமினல் நடவடிக்கை பாயும்! ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

Criminal action will be taken if fake bill is dropped! Warning to ration shop employees!

 

ரேஷன் கடைகளில் போலி பில் போடப்படுவது, தரமற்ற பொருள்களை வழங்குவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரித்துள்ளார்.

 

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியுள்ளதாவது: 

 

ரேஷன் கடைகளில் சில விற்பனையாளர்கள் போலி பில் உருவாக்குவது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. சில நேரங்களில், கார்டுதாரர்கள் ஒரு பொருளை வாங்கினாலும், தகுதியான அனைத்துப் பொருள்களுக்கும் உள்ளீடு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 

கார்டுதாரர்களால் வாங்கப்படாத பொருள்களுக்குப் போலி பில் உருவாக்குவது குற்றச்செயலாகும். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 

 

இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக பொதுவிநியோகத்திட்ட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தைக் கூட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. அக்கூட்டங்களில் மண்டல இணைப்பதிவாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். 

 

ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் அலுவலர்கள் குறைந்தது 10 ரேஷன் கார்டுதாரர்களுடன் உரையாடி ரேஷன் கடையின் செயல்பாடு, விற்பனையாளரின் அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து கருத்துகளைப் பெற்று அறிக்கையைக் கையொப்பத்துடன் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

 

அத்தியாவசிய, சிறப்பு பொதுவிநியோகத் திட்ட பொருள்களின் இருப்பு போன்ற அனைத்து கட்டாய தகவல்களையும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தகவல் பலகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். 

 

மண்டலங்களில் உள்ள ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களுடன் மாதாந்திர கூட்டம், அந்தந்த துணைப்பதிவாளர்களால் நடத்தப்பட வேண்டும். இணைப்பதிராளர்கள் காலாண்டு கூட்டம் நடத்த வேண்டும். 

 

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தரமற்ற பொருள்களை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கக் கூடாது. கட்டுப்பாடற்ற பொருள்களின் தரம் குறித்து வழக்கமான சோதனைகள் செய்யப்பட வேண்டும். 

 

விற்பனையாளர் பற்றாக்குறை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட சங்கங்கள் மூலம் ரேஷன் கடைகளில் பணி செய்யும் பொருட்டு பணியாளர்களை பணிமாறுதல் அடிப்படையில் பணிபுரிய அனுமதிக்கலாம். 

 

இது தொடர்பாக உரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பொது விநியோகத் திட்டத்தை எவ்வித புகாருக்கும் இடமின்றி சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்!

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Ration shops open on Sunday!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.

அதில், “சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 3 வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

அதாவது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்படும்” என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

Ration shops open on Sunday!

இதனைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 6 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை (17.12.2023) ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. மேலும் ரூ. 6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் தொடங்கி வைக்கிறார். 

Next Story

ரூ. 6 ஆயிரம் வெள்ள நிவாரணம்; கூட்டுறவுத் துறை சார்பில் குழு அமைப்பு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
6 thousand flood relief; Committee Organization on behalf of Co-operative Sector

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 3 வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

6 thousand flood relief; Committee Organization on behalf of Co-operative Sector

இந்நிலையில் சென்னை வடக்கு மண்டலத்தில் ரூ. 6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க கூட்டுறவுத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 590 ரேசன் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கூடுதல் பணியாளர்கள், வருவாய்த்துறை சார்பில் 2 பேர் என 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வெள்ள நிவாரணம் தருவது தொடர்பாக இந்த குழுவில் இடம்பெற்றுள்ள கூட்டுறவு பணியாளர்களுக்கு சென்னையில் (14/12/2023) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகங்களில் சரக கூட்டுறவு சார் பதிவாளர்களால் பயிற்சி தரப்பட உள்ளது.