Skip to main content

விஜய் உடன் கிரிக்கெட் வீரர் - வைரலாகும் புகைப்படம்!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020


கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி, நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

நடப்பு ஐ.பி.எல் ஆட்டத்தில், கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி. அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், சுழற்பந்து வீச்சாளர். அவருக்கு கிரிக்கெட் மீதான காதலை தாண்டி நடிகர் விஜய் என்றால், கொள்ளை பிரியம். இந்நிலையில், இன்று நடிகர் விஜயை சந்தித்துப் பேசிய அவர், புகைப்படம் ஒன்றை அவருடன் இணைந்து எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இவர் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ் சினிமா தொடாததைத் தொடும் மலையாள சினிமா! சரியா? தவறா?

Published on 05/06/2021 | Edited on 05/06/2021
biriyani malayalam movie

 

பிரிக்க முடியாதது... அரசியலும் சினிமாவும்! - இது தமிழகத்துக்குப் பொருந்தும். ஆனால் கேரளத்தில் இந்த வாசகம் பொருந்தாது. அங்கு சினிமாக்காரர்கள் பெரிதாக அரசியல் பேசுவதில்லை, அரசியலில் நுழைந்தாலும் பெரிய வெற்றி பெறுவதில்லை. ஆனால், சினிமாவில் பேசப்படும் அரசியல், அரசியல் பேசும் சினிமாக்கள் என்னும் தலைப்பை எடுத்தால் தமிழகம், கேரளம் இரண்டிலுமே தொடர்ந்து பல படங்கள் இந்த வகையில் வெளியாகின்றன. ஆனால், பேசப்படும் விதம் என்பது இரண்டு மொழிகளிலும் மாறுபடுகின்றன. அந்தந்த மாநிலங்களின் அரசியல் தன்மை, சூழலுக்கு ஏற்றதுபோல மாறுவது இயற்கைதான்.

 

தமிழ் திரைப்படங்களில் ஆரம்பத்தில் தேசிய அரசியல், பிறகு திராவிட அரசியல், பொதுவுடைமை அரசியல் என காலம்தோறும் படங்களில் அரசியல் பரிணமித்து வந்தது. தொண்ணூறுகளில் அரசியல் படங்கள் என்றாலே லஞ்ச ஊழலுக்கு எதிரான காட்சிகளை வைத்து நடுத்தர மக்கள் பார்வையிலிருந்து வசனங்களை வைத்து மேலோட்டமான அரசியலை பேசும் படங்கள் என்றாகின. சாதி அரசியல் பேசும் படங்கள் அவ்வப்போது வந்தாலும் அவை ஒரு பக்கத்திலிருந்து எழுதப்பட்டு எடுக்கப்பட்ட படங்களாக பெரும்பாலும் இருந்தன. ஈழ அரசியல் பேசிய பல படங்கள், சரியாகப் பேசாததால் எதிர்ப்பை சம்பாரித்தன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக மீண்டும் தமிழ் படங்களில் ஆழமான அரசியல் பேசும் படங்களும் அரசியல் சரித்தன்மையுடன் பேசும் படங்களும் வரத்தொடங்கியுள்ளன. முக்கியமாக ஜனநாதன், ராஜு முருகன், பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வருகைக்குப் பிறகு இது நடந்துள்ளது. அதே நேரம் அரசியல் சரித்தன்மையை காக்க வேண்டியும் விமர்சனங்களை தவிர்க்க வேண்டியும் தமிழ்த் திரையுலகால் தொடப்படாத சில இடங்கள் உள்ளன. அந்த இடங்களை எளிதாகத் தொட்டுப் பேசி விளையாடி அதை விவாதமாக்குவது மலையாள சினிமாவின் வழக்கம். அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியாகியிருக்கிறது 'நாயாட்டு'.

 

trance fagath fazil

 

வேட்டை என்று அர்த்தப்படும் 'நாயாட்டு' என்ற டைட்டிலுடன் வந்திருக்கும் இந்தப் படத்தில் அரசியல் - அதிகார கூட்டணியால்  வேட்டையாடப்படுவது மூன்று போலீஸ்காரர்கள். இந்த கதைக்கருவே நமக்கு முரணாக இருக்கிறதல்லவா? அதிகாரமே அவர்களிடம்தான் இருக்கிறது? அவர்களை யார் வேட்டையாடுவது என்று கேட்கிறோமல்லவா? அவர்களை வேட்டையாடும் அரசியல் எது என்று தெரிந்தால் இந்த முரண் இன்னும் அதிகமாகும். படத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான பெண் போலீசை அவரது உறவினரான இளைஞன் தொல்லை செய்கிறான். இதற்காகக் கைது செய்யப்படும் அவன், தான் சார்ந்த தலித் அரசியல் இயக்கத்தின் அதிகாரத்தால் உடனே வெளியே வருகிறான். அவனுக்கும் இன்னும் இரண்டு போலீஸ் பாத்திரங்களாக வரும் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன் இருவருக்கும் நடக்கும் பிரச்சனை விபரீதமாக முடிய பெண் போலீஸான நிமிஷா உள்பட மூன்று போலீஸ்காரர்களும் தலைமறைவாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். படத்தில் தலித் அரசியல் இயக்கங்களின் செயல்பாடு, வாக்கு வங்கி தவறாகப் பயன்படுத்தப்படுவது போன்றவை சார்ந்து அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள், சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் ஆகியவைதான் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன. விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்திருப்பது தமிழ் சமூக ஊடக சூழலில்தான். கேரளத்தில் 'இது நடக்காததா? இப்படியும் நடக்கத்தானே செய்கிறது? அதையும் பேசலாம்...' என்று கேசுவலாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் சேட்டன்கள்.

 

தலித் அமைப்புகள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக உருவாகிய கட்சிகள் மெல்ல வளர்ந்து அரசியலில் முன் வரிசைக்கு வரும் இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட படங்கள் உண்டாகக்கூடிய விளைவு என்பது கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று. அதே நேரம் இந்தப் படம் கேரள அரசியல் சூழலுக்கு எழுதப்பட்ட ஒன்று, அதை நமது அரசியல் பார்வையில் பார்த்து விமர்சிக்க வேண்டியதில்லை என்கின்றனர் சில சினிமா, அரசியல் பார்வையாளர்கள். உண்மைதான், மலையாளத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழில் எடுக்கப்பட சாத்தியமில்லாதவை. ஃபகத் ஃபாசில் நடித்த 'ட்ரான்ஸ்', கடந்த ஆண்டு வெளியான திரைப்படம். கிறிஸ்தவ மத பிரச்சாரத்தை ஒரு மிகப்பெரிய தொழிலாக, ஏமாற்று வேலையாக ஒரு அமைப்பு செய்வதையும் அதனால் பலர் ஏமாறுவதையும் பாதிக்கப்படுவதையும் மிக விரிவாக, வெளிப்படையாகக் காட்டியிருந்தது 'ட்ரான்ஸ்'. இந்தப் படம் வெளிவந்த போது கேரளத்திலேயே எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் வெளியீட்டில் தடை, போராட்டம் என்று பெரிதாகவில்லை.

 

great indian kitchen

 

கடந்த ஆண்டு வெளியான இன்னொரு மலையாள படமான 'பிரியாணி', மத அடிப்படைவாத, தீவிரவாத இயக்கங்களின் மூளைச் சலவைக்கு பலியாகி தனது குடும்பத்தை விட்டு வெளியேறும் ஒரு இசுலாமிய இளைஞனின் செயலால் அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், முக்கியமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசியிருந்தது. சமூகத்தால் அலைக்கழிக்கப்படும் அந்தப் பெண் சமூகத்தை திருப்பித் தாக்க தேர்ந்தெடுக்கும் வழி நம்மை அதிர வைக்கிறது. இதுவும் கொஞ்சம் பிசகினாலும் தவறாக எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ள ஒரு கதைக்கரு. இந்தப் படம் வெகுவாகப் பாராட்டப்பட்டு பல விருதுகளையும் பெற்றது. முக்கிய பாத்திரத்தில் நடித்த பெண்ணான கனி குஸ்ருதி அங்கு கொண்டாடப்படுகிறார். சமீபத்தில் வெளிவந்து தமிழ் சூழலில் விவாதத்தைக் கிளப்பிய இன்னொரு மலையாளப் படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இந்திய பெண்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் அநீதியை மிக இயல்பாக சொல்லியிருந்தது. படத்தின் சிறப்பே, ஒரு வன்முறையாக, கொடுமையாக அல்லாமல் மிக இயல்பாக பெண்களே ஏற்றுகொள்ளும் வகையில் அவர்களின் வாழ்வு குடும்பம் என்னும் அமைப்பில் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை சொல்லியதுதான்.

 

மலையாளத்தில் நமது சர்கார், முதல்வன், மக்களாட்சி ஸ்டைல் நாயகத்தன்மை நிறைந்த கமர்ஷியல் அரசியல் படங்களும் வருகின்றன. அவர்களின் ஃபேவரிட்டான இடது சாரி நாயகனைக் கொண்ட படங்கள் அவ்வப்போது வருகின்றன. மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றியை பெற்ற 'லூசிஃபர்' அப்படியொரு படம்தான். தமிழகத்தில் 2016-17இல் நிலவிய அரசியல் சூழலை பிரதிபலிப்பதுபோல இருந்தது இப்படம். ஒரு பெரிய அரசியல் தலைவர் மறைய அவரது இடத்துக்கு நடக்கும் போட்டி, அரசியல் சதுரங்கம்தான் கதை. விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்திருந்தது லூசிஃபர். சமீபத்தில் மம்மூட்டி நடித்திருந்த 'ஒன்' திரைப்படத்தில் 'சரியாகப் பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறும் சட்டம் கொண்டுவர வேண்டும்' என்பதுதான் மையம். இப்படி மலையாளத்தில் பல விதமான அரசியல் படங்கள் வெளியாகின்றன. ஒரே விசயம் கொண்டாடப்படுவதும் கிண்டல் செய்யப்படுவதும் அங்கு சாதாரணமாக நிகழ்கின்றன. அதற்கான வெளி அங்கு இருப்பது நேர்மறையான விஷயம். பேசாப் பொருள்கள் அனைத்தும் பேசப்படவேண்டும் என்பது முக்கியம், அது தவறாகப் பேசப்பட்டுவிடக் கூடாது என்பதும் மிக முக்கியம்.  

 

                                                                     
 

Next Story

தந்தை தந்த அறிமுகம்... ’தளபதி’ என்னும் புது முகம்! விஜய்யின் பயணம் #1   

Published on 06/11/2020 | Edited on 06/11/2020


 

thalaivaa vijay

 

மீண்டும் ஒரு முறை சர்ச்சையாகியிருக்கிறது விஜய் என்ற பெயர். கட்சி தொடங்க விண்ணப்பம் என்று செய்தி, அதை உறுதி செய்த தந்தை, தனக்கு சம்மந்தமில்லை என்று விஜய் அறிக்கை... என இதுவரை இல்லாத மனநிலையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். சில ஆண்டுகளாகவே அவர்களது போஸ்டர்களிலும் பேனர்களிலும் சினிமாவைத் தாண்டிய அரசியல் வாசகங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. 'நாளைய தீர்ப்பி'ல் அறிமுகமாகி தனது தந்தையால் 'இளைய தளபதி' ஆக்கப்பட்டு தற்பொழுது ரசிகர்களால் 'தளபதி'யாக உயர்ந்து நிற்கிறார் விஜய்.

 

இவரது தந்தை புகழ் பெற்ற, பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர்தான், அதனால் இவர் சினிமாவுக்குள் வந்தது மிக எளிதாகவும் இயல்பாகவும் நடந்துதான். ஆனால், அதன் பின்பு இவர் பெற்ற வெற்றிகளோ, இன்று அடைந்திருக்கும் புகழோ இவருக்கு எளிதாகவோ இயல்பாகவோ கிடைத்திடவில்லை. இவரது சினிமா பயணத்தில் வழியெங்கும் பலமுறை விழுந்திருக்கிறார், பின்பு ஆற்றலைத் திரட்டி எழுந்திருக்கிறார்.

 

இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக, பெரும்பாலும் சிறு வயது விஜயகாந்த்தாக நடித்த விஜய், கதாநாயகனாக அறிமுகமானது 1992இல் வெளிவந்த 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில்தான். அறிமுகமானபோது இவரது தோற்றம், நடனம், நடிப்பு என அனைத்தும் விமர்சிக்கப்பட்டன, கேலி பேசப்பட்டன. சளைக்கவில்லை எஸ்.ஏ.சி. தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா என பல படங்களை தனது மகனை வைத்து இயக்கினார். இவற்றில் செந்தூரப்பாண்டி மட்டுமே ஓரளவு வெற்றியையும் பெற்று அனைவரும் பார்க்கும்படியும் இருந்தது. மற்ற படங்கள் அனைத்தும் கவர்ச்சி, அதீத மசாலாத்தனம் என விமர்சிக்கப்பட்ட படங்கள். அதிலும் 'ரசிகன்' திரைப்படம் கவர்ச்சி, ஆபாசம், மசாலா  கலவையில் உச்சமாக இருந்தது.

 

இதனால், அத்தனை படங்கள் நடித்தாலும் விஜய் என்னும் நடிகர் குடும்பங்களால், பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நடிகராகவே அதுவரை இருந்தார். இத்தனை விமர்சனங்களிலிருந்தும் விஜயை மீட்கும் வண்ணம் 1996ஆம் வருடம் வெளியானது 'பூவே உனக்காக'. விக்ரமன் இயக்கிய அந்தப் படம்தான் அதன் பின்னர் பல ஆண்டுகள் விஜயைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தமிழகத்தில் பலரும் நினைக்க வைத்த வெற்றித் திரைப்படம். திருமண வீடுகளெங்கும் 'ஆனந்தம் ஆனந்தம்', காதலர்கள் மனங்களெங்கும் 'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்' என முழுமையாக மக்களிடம் விஜயைக் கொண்டு சேர்த்தது அந்தத் திரைப்படம். இதன் தொடர்ச்சியாக அமைந்தவைதான் பின்னர் வந்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற இந்த வகை வெற்றிப் படங்கள்.

 

 

naalaiya theerpu

 

 

அதன் பிறகு சில வெற்றிப்படங்கள், ஓரிரு தோல்விப் படங்கள் என சென்றது விஜயின் சினிமா பயணம். ஆனாலும் அப்பொழுது விஜயைப் பற்றி இருந்த பேச்சு, அவர் B, C சென்டர்களுக்கான நாயகன் என்பதே. இப்பொழுது தமிழ் சினிமா சந்தையில் இந்த A, B, C சென்டர் பிரிவுகள் குறைந்துவிட்டன. அப்பொழுதெல்லாம் அந்த வரையறை பலமாக இருந்தது. விஜய் ஸ்டைலான பாத்திரங்களுக்கு ஏற்றவரல்ல என்ற பார்வையே இருந்தது. அவரும் அதுபோல தனது உடைகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை, செலுத்தினாலும் ஏதோ ஒன்று குறைவது போன்றே இருக்கும். பிரஷாந்த் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது, திருடா திருடா, ஜீன்ஸ் என மணிரத்னம், ஷங்கர் நாயகனாக அவரும் இன்னொரு புறம் அழகான நாயகனாக அஜித்தும் பேசப்பட, விஜய்க்கு இது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த 'குஷி' அந்த பிம்பத்தை மாற்றியது. 'வாலி' என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற, வழக்கத்துக்கு மாறான படத்தை எடுத்திருந்த எஸ்.ஜே.சூர்யா, ஒரு வெகு வழக்கமான கதை, அதையும் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு கொண்டு சென்ற 'குஷி' வாலியை மிஞ்சும் வெற்றியைப் பெற்றது. விஜயின் ஸ்டைலிஷ் தோற்றத்துக்கும் உடைகளுக்கும் துவக்கமாக அது அமைந்தது.

 

நல்ல வெற்றிகள், புகழ், மெல்ல பெருகிக்கொண்டிருந்த ரசிகர்கள் எண்ணிக்கை, என தொழில் வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருந்த அந்த சமயம், விஜயின் சொந்த வாழ்க்கை குறித்து சில செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அவர் காதலில் விழுந்ததாகவும் அதை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அதனால் தற்கொலை முயற்சி அளவுக்கு சென்றதாகவும் அப்போது சில பத்திரிகைகளில் 'கிசுகிசு' வகை செய்திகள் வந்தன. ஆனால், எதுவும் பெரிதாக வெளிப்படையாகப் பேசப்படவில்லை. அதற்கு விஜய் தரப்பில் யாரும் பதிலும் சொல்லவில்லை, பதில் சொன்னது 1999ஆம் ஆண்டு நடந்த விஜய்-சங்கீதா திருமணம். லண்டனில் வாழ்ந்துவந்த இலங்கைத் தமிழரும் தன் ரசிகையுமான சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார் விஜய். இன்று வரை அவர்களது அன்பில் எந்தக் குறையுமின்றி செல்கிறது அவர்கள் உறவு.



 

vijay with sangeetha


 

காதல் படங்கள், குடும்பப் படங்கள், காமெடி படங்கள் என பல வெற்றிகளைக் கொடுத்த விஜய்க்கு அப்பொழுது வரை ஆக்ஷன் என்ற ஒன்று அமையவேயில்லை. தனது தந்தையின் இயக்கத்தில் அவர் நடித்த பல படங்கள் ஆக்ஷன் படங்களாக ஆக்க முயற்சிக்கப்பட்டவைதான். ஆனால் எதுவும் வெற்றி பெறவில்லை. விஜயின் பட போஸ்டர்களோ பாடல்களோ வெளிவரும்போதே அவை ஆக்ஷன் படம் போல  இருந்தால், 'படம் அவ்வளவுதான்' என்று மற்றவர்கள் பேசக்கூடிய அளவுக்கு இருந்தது விஜய் கிராஃப். ஆரம்ப கால அப்பாவின் படங்களும் அதற்குப் பின் அவ்வப்போது முயற்சித்த ஆக்ஷன் படங்களான நெஞ்சினிலே, பகவதி, தமிழன், புதியகீதை போன்ற படங்களும் தோல்வியை சந்தித்ததால், 'காதல், காமெடி, குடும்பம் தாண்டிய கதைகள் விஜய்க்கு செட் ஆகாது' என பேசப்பட்டது. இன்னொரு புறம் அவரது போட்டியாளராக இருந்த அஜித் அமர்க்களம், தீனா, சிட்டிசன் என ஆக்ஷனில் கலக்கிக் கொண்டிருந்தார்.

 

இந்த நிலையில் தோற்றம், உடை, பேச்சு, சூழல் ஏன் படத்தின் கலர் வரை அனைத்திலும் அதுவரை விஜய் நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு வந்தன ஒரு புதிய விஜய் படத்தின் போஸ்டர்கள். அது எந்தப் படம்? வெற்றி பெற்றதா? கீழே உள்ள கட்டுரை லிங்க்கை கிளிக் செய்து தொடர்ந்து வாசியுங்கள்...     

எஸ்.ஏ.சி, விஜய்க்கு செய்தது என்ன? விஜய்யின் பயணம் #2