Skip to main content

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர்,  நாகை மற்றும்  புதுச்சேரி,  காரைக்கால் ஆகிய கடலோரம் மற்றும் டெல்டா பகுதிககளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும்  அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

v


இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் கடலூரில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  முத்தரசன், " மத்திய அரசாங்கம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்புதலை  ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தினார்.  இதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 


கூடத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த  மத்திய குழு உறுப்பினர் வாசுகி,  " கடலூர் மாவட்டத்தை பெட்ரோல் மற்றும் ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற நினைக்கும் மத்திய, மாநில அரசுகள் முயற்சினை கைவிட வேண்டும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, குமாரட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எற்படும் விளைவுகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக வருகின்ற 7,8 ஆம் தேதிகளில் இரு சக்கர வாகன பிரச்சார பயனத்தை மார்க்கிஸ்ட் கட்சி மேற்கொள்ள இருக்கிறது" என்றார்.  

 

v


மேலும் அவர்,  "குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், வங்கியில் விவசாயிகள் பெயரில் 300 கோடி மோசடி செய்த கரும்பு சர்க்கரை ஆலை நிர்வாகம், அதற்கான முழு பொருப்பையும் ஏற்றுகொண்டு, விவசாயிகளுக்கு எவ்வித தொந்தரவும் வங்கியில் இருந்து வராமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தலையீட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும், தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம், ஒவ்வொரு மண்டலத்திலும் தனியார் வாகனங்களில்  அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்டவைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீட்டு தடுக்க வேண்டும், நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் உடைய மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும், என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும், கருவேப்பிலங்குறிச்சியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி வழக்கினை சிபிசிஐடி விசாரனைக்கு மாற்ற வேண்டும், மத்திய அரசு மும்மொழி கொள்கையை திணிப்பது இரு மொழி கொள்கைக்கு எதிரானது. மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதித்து போராடுவோம்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.