Skip to main content

பள்ளி மாணவியை கொலை செய்த குற்றவாளிளை உடனே கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 13 வயது பள்ளி மாணவியை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து உரிய தண்டனை பெற்றுக்கொடுக வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கந்தர்வகோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் மோனிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (13). எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியான இவர் கடந்த திங்கள்கிழமை காலையில் அருகில் உள்ள குளத்திற்கு தண்ணிர் எடுக்கச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததைத் தொடர்ந்து உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் சிறுமி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

 

CPM urges immediate arrest in pudukottai incident


சிறுமியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார். சிறுமியின் சாவுக்கு காரணமாகவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சிபிஎம், மாதர் சங்தக்தினர் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் உடல் பெற்று அடக்கம் செய்தனர். ஆனால், சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிக்கப்படவில்லை.

இந்நிலையில், புதன்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் பி.வீராச்சாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, துணைச் செயலாளர் கே.நாடியம்மை, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா, ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் இறந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.


இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறும்போது: ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல் நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து உள்ளது என்பதற்கு இதுவொரு உதாரணம். அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டபிறகு சாலை விபத்து, கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஆட்சியாளர்களால் இத்தகைய அவலங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

13 வயது பள்ளி மாணவியின் மரணம் மிகுந்த வேதனைக்குறியது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.