Skip to main content

பெட்ரோல், டீசல் விலை உயர்வு! - சி.பி.எம். ஆர்ப்பாட்டம்!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

CPM party demand government to reduce petrol price

 

பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை நெருங்கிக் கொண்டுள்ளது. கேஸ் ஆயிரம் ரூபாயை நெருங்கிக் கொண்டுள்ளது. மோடி, பிரதமராகப் பதவியேற்ற பிறகு பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை உயர்வு என்பது நாளுக்குநாள் உயர்ந்து கொண்டேவருகிறது. இந்த விலை ஏற்றங்களால் சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்களின் வாடகை, ஹோட்டல்களில் உணவுப் பண்டங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்துவருகிறது.

 

இந்த விலை ஏற்றம் குறித்து மத்திய மாநில அரசுகள் மிகுந்த அலட்சியத்துடன் ஆட்சி நடத்தி வருவதாகவும் அதனைக் கண்டித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் தீவிரப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் சி.பி.எம். கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் தலைமையில், வழக்கறிஞர் முனியாண்டி முன்னிலையில், 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று காந்திசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேபோன்று அவலூர்பேட்டை நகரச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் உட்பட பல்வேறு தொழிலாளர் சங்கம் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.