Skip to main content

புதிய சட்டங்களை எதிர்த்து நவம்பர் 26ல் சி.பி.எம் போராட்டம் அறிவிப்பு!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

CPM  farmers bill and labor law   November 26


மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

 

மார்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நாகைக்கு வந்திருந்தபோது கூறுகையில், "விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. சர்க்கரை ஆலைகள் கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடுகின்றனர். ஆனால் ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பதில்லை. தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு 1,834 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருக்கிறது. இது அரசு சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளும் போட்டுக் கொண்ட ஒப்பந்தம். இதுவே இவ்வளவு லட்சணம், மோசடி, எமாற்று வேலை. புதிய சட்டத்தின்படி இனி கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போடவேண்டிவரும். விவசாயிகளுக்கான பணத்தை யாரிடம் கேட்பது. ஆகவே, புதிய சட்டங்கள் சிறு குறு விவசாயிகளை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிடும். பல இடர்பாடுகளைச் சந்திக்கப் போகின்றன. 

 

அதேபோலவே தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 26 தொழிலாளர்கள் நலன் சட்டங்களைச் சுருக்கி தொகுத்து 3 சட்டமாக நிறைவேற்றியுள்ளனர். இந்தச் சட்டத்தால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும் தொழிலாளர்களையும் பாதுகாத்திடவும், புதிய சட்டங்களை எதிர்த்தும் நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாவம்பர் 26ஆம் தேதி அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.