Skip to main content

“இது காலத்தின் கட்டாயம்..” சி.பி.எம். பாலகிருஷ்ணன் 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

CPM Balakrishnan speech at kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார விளக்க மற்றும் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமை தாங்க, நகர செயலாளர் தங்கராசு, ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், சீனிவாசன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், மாநிலக்குழு வெங்கட்ராமன் ஆனந்தன் ஆகியோர் துவக்க உரையாற்றினர். 

 

அதன்பிறகு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, “சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றிய சில மணி நேரங்களில் அதிமுக, பாமக கூட்டணி உடன்பாடு நடந்துள்ளது. இந்த உள் இடஒதுக்கீடு என்பது வன்னியர்களுக்காக அல்ல; அதிமுக, பாமக என்ற இரண்டு கட்சிகளும் ஓட்டு வாங்குவதற்காக சேர்ந்து போட்ட நாடகம். 

 

தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இருக்காது. அப்படி அந்த அதிமுக கட்சி இருக்க வேண்டுமென்றால், பாஜக கூட்டணியைவிட்டு வெளியே வந்தால்தான் அது நடக்கும். வளர்ச்சித் திட்டத்தில் தமிழகம் முதலிடம் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் பலவற்றில் ஊழல்தான் முதலிடத்தில் உள்ளது. பிரதமர் மோடியும் அமித்ஷாவும் சினிமாவில் நடிக்க வந்திருந்தால் உண்மையான திரைப்பட நடிகர்களான சிவாஜி, அமிதாப் பச்சனையே நடிப்பில் மிஞ்சியிருப்பார்கள். அந்த அளவிற்கு மக்களிடம் நடிக்கிறார்கள். 

 

‘தமிழ் சிறந்த மொழி. அதைப் படிக்கவில்லை’ என பிரதமர் மோடி வருத்தப்பட்டு பேசுகிறார். அவரது ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் இந்தியில்தானே கடிதம் எழுதுகின்றனர். ஏன் தமிழில் எழுத வேண்டியதுதானே. மோடி தமிழகத்திற்கு வந்தால் விவசாயிகளைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார். டெல்லியில் விவசாயிகள் 110 நாட்களாக போராடி வருகிறார்கள். அந்த விவசாயிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த இடத்திற்குச் சென்று இந்த வசனத்தைப் பேச வேண்டியதுதானே. எனவே, வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள். ஊழலில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்தை மீட்டெடுக்க ஆட்சி மாற்றம் அவசியம். இது காலத்தின் கட்டாயம் என்பதை மக்களும் உணர்ந்துள்ளார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.