Skip to main content

சிபிஎம்- ல் இருந்து மாஜி பெண் எம்.எல்.ஏ  நீக்கம்!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
c

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி தொகுதி எம்.எல்.ஏவாக திமுக கூட்டணியில் வெற்றிபெற்று 2006 முதல் 2011 வரை இருந்தவர் சி.பி.எம் கட்சியை சேர்ந்த லதா. சி.பி.எம் கட்சியின் முழு நேர ஊழியராகவும், வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் கடந்த 10 ஆண்டுகளாக இருந்துவந்தார். இந்நிலையில், ஜனவரி 21ந்தேதி கூடிய வேலூர் மாவட்டக்குழு கூட்டத்தில், கட்சியின் விதிகள், கட்டுப்பாடுகளை மீறியதால், முன்னால் எம்.எல்.ஏ லதா கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என அறிவித்துள்ளனர்.

 


இதுப்பற்றி வேலூர் மாவட்ட செயலாளர் தயாநிதியிடம் கேட்டபோது, கடந்த ஓராண்டாக கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை. அவர் கட்சியின் முழு நேர ஊழியர் என்பதால் முன்னால் எம்.எல்.ஏவுக்கான ஊதியத்தை கட்சிக்கு அவர் வழங்க வேண்டும் அதையும் அவர் கடந்த 15 மாதங்களாக வழங்கவில்லை. இதுப்பற்றி 6 முறை கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் தரவில்லை, விளக்கமும் தரவில்லை. இதனால் கடந்த டிசம்பர் மாதம் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

 


ஏன் அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்தார் என கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, லதாவின் கணவர் மணி. தொடக்கப்பள்ளி ஆசிரியராகவுள்ளார். கட்சி ஆதரவு பெற்ற அரசு ஊழியர் அமைப்பில் நிர்வாகியாக இருந்தார். அவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என ஓழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். அவரை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாக குழுவில் லதா முறையிட்டு வந்தார். அவரை மீண்டும் இணைப்பதில் சில சிக்கல்கள் இருந்ததால் அவரை இணைக்காமல் வைத்திருந்தனர். இதனால் அவர் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தார், இதனால் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.

 


நாம் தகவல் பெற லதாவை தொடர்பு கொண்டபோது அவரது எண் சுச் ஆப் நிலையில் இருந்தது. அவரது ஆதரவாளர்கள் நம்மிடம், 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதலில் ஒரு தரப்புக்கு அதிகாரம் கைக்கு வந்ததும் லதாவை பழிவாங்கிவிட்டார்கள். மணியை கட்சியை விட்டு நீக்கியபின், சில ஆண்டுகள் கழித்து அவரை கட்சியில் இணையுங்கள் என மாவட்ட கமிட்டியில் வேண்டுக்கோள் வைத்தார். அதை மாவட்ட கமிட்டி பரிசீலிக்கவில்லை. இல்லையென்றால் என்னை கட்சியை விட்டு நீக்கிவிடுங்கள் என்றார், தற்போது கட்சியை விட்டு நீக்கியுள்ளார்கள் என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கிப் போய் விடுவோம்” - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Interesting thing happened when Dindigul Srinivasan and CPM candidate campaigned

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தமும், அதிமுக  கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்கும்  போட்டியிடுகின்றனர். அதுபோல் பிஜேபி கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர்  திலகபாமாவும் போட்டியிடுகின்றனர். இப்படி திண்டுக்கல் பாராளுமன்ற  தொகுதியில் மும்முனை போட்டி மூலம் தேர்தல் களமும் சூடுபிடித்து வருகிறது. 

வேட்பாளர்களும்  மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணிகளில்  ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் திண்டுக்கல் மாநகராட்சி  பகுதியான வேடபட்டி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்  தனது ஆதரவாளர்களுடன் திறந்த ஜீப்பில் மக்களை சந்தித்து வாக்கு  சேகரித்துக் கொண்டு வந்தனர்.

அப்போது திடீரென எதிரே  எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்குடன் முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசனும் தனது ஆதரவாளர்களுடன் இரட்டை இலைக்கு வாக்கு  கேட்டு வந்து கொண்டிருந்தார். இப்படி இரண்டு வேட்பாளர்களும் தனது  ஆதரவாளர்களுடன் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். அப்போது இரண்டு  வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கைகூப்பி வணங்கிக் கொண்டனர். 

அப்போது உடன் இருந்த சீனிவாசனோ, சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை பார்த்து ‘நல்வாழ்த்துக்கள் சச்சிதானந்தம் நமக்குள் சண்டை வேண்டாம் நாம்  ஒதுங்கி சென்று விடுவோம் மக்களிடம் ஆதரவு கேட்போம் யாருக்கு ஆதரவு  அளிக்கிறார்களோ அதை நாம் ஏற்றுக் கொள்வோம் மக்கள் தீர்ப்பே மகேசன்  தீர்ப்பு...’ என்று நகைச்சுவையாக பேசினார். அதைக் கண்டு கூட்டத்தில் இருந்த  இரண்டு கட்சி ஆதரவாளர்களுமே சிரித்து விட்டனர். அதைத் தொடர்ந்து  இரண்டு வேட்பாளர்களும் தனது ஆதரவாளர்களுடன் ஒதுங்கிச் சென்றனர்.