ADVERTISEMENT
அதிமுகவினர் உண்ணாவிரதம் இருப்பது கபட நாடகம், தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல் என்றார் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
ADVERTISEMENT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த போராட்டம் குறித்து பாலகிருஷ்ணன் மேலும் கூறுகையில், "காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடரும், தொடர்ந்து நடத்துவோம். அதோடு மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது, கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவது என பல்வேறு போராட்டங்கள் தொடரும்" என்றார் அவர்.
Show comments