Skip to main content

இந்திய வரலாற்றைத் திருத்தாதே! மனு வாதத்தை திணிக்காதே!-சி.பி.ஐ.மறியல் நிகழ்வு!

Published on 13/10/2020 | Edited on 16/10/2020

 

இன்றைய கரோனா பாதிப்பு நெருக்கடியான சூழலில் மத்தியில் ஆளும் பா.ஜ.கட்சி மக்களைப் பாதுகாக்க தவறிவிட்டு இந்திய மக்களை மேலும் நெருக்கடி நோக்கி தள்ளுகிற மக்கள் விரோத சட்டங்களை பலமான எதிர்க்கட்சிகள் அற்ற நிலையில் தந்திரமாகவும்  பலவந்தமாகவும்  திணிக்கிறது.

விவசாயிகள்,தொழிலாளர்கள் ஏழை எளிய மக்களின் நலன்களை ‘’அடித்துப்பறிக்கிற’’ மத்திய அரசின் கொடுமையான வேளாண்மை திருத்தச் சட்டங்கள்.பல்லாண்டு காலமாக பாதுகாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் கொடுமை. போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் பறிப்பு.தகுதி இருந்தும் தமிழ்நாட்டு மாணவர்களை தற்கொலைக்கு தள்ளும் ‘’நீட்’’ தேர்வு முறையை   திரும்பப்பெற வலியுறுத்தி. மாநிலஅரசின் உரிமைகள் பறிப்பு. நரித்தந்திர அரசியல் அடக்குமுறை. தமிழக அடிமை எடப்பாடி அரசு பதவிக்காக துணைபோகும் அவலங்கள். ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கட்டிடத்தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களின் ‘’கரோனாகால’’  வருமான இழப்புக்கு ஈடுகட்டும் விதமாக மாதம் 7500ரூ. இழப்பீடு வழங்கக் கோரி, மத்தியமாநில அரசுகளின் காதுகளில் விழும்படி ‘’போர்  சங்கநாத’’ ஒலி எழுப்பும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுக்க மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னையில் அக்டோபர் 12 திங்கள் காலை 11.00 மணியளவில்  கிண்டி தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் துவக்கி வைக்க சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை,மாதர்சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சுசீலா,மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் வி.கே.கோபாலன். திருவான்மியூர், தரமணி ஆட்டோ, ஷேர்ஆட்டோ தொழிற்சங்கவாதிகள் பலரோடு, சீனிவாசன், பத்மநாபன்,சி.சு.கோவிந்தன்,டீகாராமன்,போன்றோர் சேர்ந்து உரத்த குரலில் மத்திய மாநில அரசை நோக்கி கேட்ட அறிவுபூர்வமான கோபமான கேள்விகள் செவிடன் காதில் ஊதிய சங்காகி விடாமல் இருக்க வேண்டும். ஆக்க பூர்வமான கேள்விகள் கேட்பவர்கள் மீது மத்திய அரசு ‘’அர்பன் நக்ஸல் முத்திரை’’ குத்தி ஜெயிலில் பிடித்துதான் போடும் என்ற பயம் இன்றி நடந்த எழுச்சிமிக்க மறியல் போரில் கைக்குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் மாணவ மாணவிகள், ஆட்டோ ஷேர் ஆட்டோ  தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், சென்னை புறநகரை  ஒட்டியுள்ள விவசாயப் பெருங்குடி மக்களும் பல நூற்றுக்கணக்கில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நம் கேள்விகளுக்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசனின்  ‘’நறுக் சுருக்’’ பதில்கள் ,

நக்கீரன் ; விவசாயிகளுக்கான மோடி அரசின் திட்டங்கள் பற்றி தங்கள் பதில் என்ன?

இரா.முத்தரசன்: ‘’சர்க்கரை’’னு பேப்பர்ல எழுதிட்டு நாக்கால நக்குனா இனிக்குமா! இனிக்காது. நரேந்திரமோடி அரசின் திட்டங்கள் போலியானவை. தந்திரமானவை.  

கேள்வி: கடம்பூர் ராஜு திமுக கூட்டணி உடைந்து போகும் என்கிறாரே?

பதில்: அது அவர் ஆசை.பகல் கனவு. பேராசைகளின் வெளிப்பாடு. திமுக கூட்டணி கட்சிகளுக்குள் ஒரு அருமையான புரிதல் உள்ளது.

கேள்வி: திமுக கூட்டணியில் சில கட்சிகள் தனித் தனி சின்னத்தில் நிற்கும் என்கிறார்கள்! கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை என்ன?

பதில்: கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றி திமுக தலைமை நன்கு புரிந்து வைத்துள்ளது. எங்கள் சின்னம் பற்றி அவர்கள் சிறிதளவு கூட யோசிக்க மாட்டார்கள். எங்கள் கட்சி தேசியக் கட்சி. நாங்கள் கதிர் அரிவாள் சின்னத்தில்தான் நிற்போம்.சி.பி.எம்.அரிவாள் சுத்தியல் சின்னத்தில்தான் நிற்கும். அது திமுக தலைமைக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு அந்த புரிதல் மிக தெளிவாகவே உள்ளது.

கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளின்  ‘’கைக்கூலி தரகர்கள்’’ கிளப்பி விடும் பூச்சாண்டி வேலைகளில் இது ஒன்று. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பி.ஜே.பிக்கும் ,கொள்ளைக்கார அ.தி.மு.க.வுக்கும் வாக்களிப்பதில்லை என்று மக்கள் உறுதியான முடிவெடுத்து விட்டார்கள். மக்கள் மன்றத்தில் அவர்கள் தோற்பது உறுதியாகி விட்டது.

குறிப்பு:மறியல் பற்றி திருவான்மியூர் காவல்துறை உதவி ஆணையர் உயர்திரு.பொ.க.ரவி அவர்களிடம் நக்கீரன் சார்பாக அணுகிய போது ‘’பொதுமக்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் கட்டுப்பாடாக மறியல் நடந்தாலும் கொரோனா காலத்தில் பெருங்கூட்டமாக கூடிய காரணத்தால் அனைவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படலாம்’’ என்பதாக  கூறினார்.


கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்:

''இந்தியாவின் உயிர்நாடி விவசாயம்.விவசாயம்.
பொருளாதார உயிர்நாடி தொழிலாளர் தொழிலாளர்.
விவசாய,தொழிலாளர் நலனுக்கு மத்திய அரசு வேட்டு
திருத்தப்பட்ட சட்டங்களை மத்திய அரசே வாபஸ் வாங்கு.
குறைந்த பட்ச ஆதார விலைக்கு வேட்டு வைக்கும்
சட்டத்துக்கு விவசாயிகள் வேட்டு வைப்போம்.
அதானிக்கும் அம்பானிக்கும் பாதுகாப்பு துறையை விற்காதே.
இந்தியாவின் கோவில்கள் பொதுத் துறையை விற்காதே.
அதானிக்கு விமான நிலையங்களை விற்காதே!
துணை போகாதே!துணை போகாதே!
துப்புக்கெட்ட மோடிக்கு எடப்பாடி அரசே
துணை போகாதே!  
கொரோனா போர்வையில் வருகிற
கொடுமையான சட்டங்களைத் தூக்கியெறிவோம்.
குப்பைக் கூடையில் தூக்கி எறிவோம்.
கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழக அரசை புறக்கணிக்காதே.
இந்திய வரலாற்றைத் திருத்தாதே!
மனு வாதத்தை திணிக்காதே!
பெண்களுக்கு பாதுகாப்பற்ற மோடி அரசை எறிவோம்'' என்ற முழக்கங்கள் வைக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழக அரசுக்கு நன்றி” - குகேஷ் நெகிழ்ச்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Thank you to the Government of Tamil Nadu Gukesh 

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கனடாவில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர் குகேஷூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தொடரில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதாவது கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் உதவியாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.