அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமைகளுக்கு எதிராகச்செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை பேரணி போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஐயா அவர்கள் கொடியசைத்துத்துவக்கி வைத்தார். உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராஜா,மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.