Skip to main content

காட்டுப்பன்றி வேட்டையாட வைத்த நாட்டு வெடியில் சிக்கிய பசு மாடு!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை மற்றும் அதன் அருகிலுள்ள நிலத்தில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் அடிக்கடி வந்து மேய்ந்துவிட்டு செல்வதால் அதனை வேட்டையாட வேட்டைக்காரர்கள் அடிக்கடி நாட்டு வெடியை பயன்படுத்துவது வழக்கம். இதில் காட்டு விலங்குகள் தவிர வீட்டில் வளர்க்கப்படும் மாடு, ஆடு போன்றவையும் சிக்கி இறந்து வருகின்றன. சட்டத்துக்கு புறம்பான இந்த விவகாரத்தை வனத்துறையோ, காவல்துறையோ கண்டுக்கொள்வதில்லை. 

 

 Cow injure in explosion in vellore



ராணிப்பேட்டை அடுத்த எருக்கந்தொட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனது பசுமாட்டை, தனது ஊரில் உள்ள பாபு என்பவரின் கரம்பு நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்துள்ளார். அங்கு மேய்ந்துக்கொண்டுயிருந்த மாடு, பனங்கொட்டை ஒன்றை கடிக்க பெரும் வெடிச்சத்தம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்க நிலத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, பசுமாட்டின் வாய் கிழிந்து ரத்தம் சிந்தியது.

 

 

இதனைப்பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் கேள்விப்பட்டு ஓடிவந்த ராஜேஸ்வரி அழுதபடியே மாட்டை ராணிப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்த காவல்நிலையத்துக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் புகார் எழுதி வாங்கி விசாரணை நடத்தினர். மாங்கொட்டைக்குள் நாட்டு வெடியை தயார் செய்து வைத்தவர் மேல்பாடி கிராமம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 26 வயதான சீனுவாசன் என தெரியவந்து அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

 

விசாரணையில், காட்டுப்பன்றியை வேட்டையாடவே நாட்டு வெடியை தயார் செய்து வைத்தேன் எனச்சொல்லியுள்ளார். அந்த இளைஞர் மீது காட்டு விலங்குகள் வேட்டையாட வெடிமருந்து பயன்படுத்தியது, சட்டத்துக்கு புறம்பாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தது உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலிஸார் என்கின்றனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.