Skip to main content

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று  5,345 ஆக உயர்வு!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
theni

 

 

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,345 ஆகவும் ஜூலை மாதத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆகவும் உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று புதிதாக 317 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5,345  ஆக உயர்ந்துள்ளது.

 

தேனி மாவட்டத்தில் நேற்று வரை 5,024 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழந்தைகள் நல மருத்துவர், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுநர், ஆய்வக தொழில் நுட்பனர், கிராம செவிலியர், நர்சிங் மாணவி, இரண்டு மருத்துவ பணியாளர்கள், அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர், தூய்மை பணியாளர் தேவாரம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், போடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு செவிலியர்கள், கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், பைக்கில் திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு வந்த ஒருவர், ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்திருந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அதுபோல் ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் 8 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த மையம் மூடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 43 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மே மாதத்தில் 66 பேருக்கும் ஜூன் மாதத்தில் 593 பேருக்கும் தொற்று உறுதியான நிலையில், ஜூலை 1 முதல் நேற்று வரை ஒரே மாதத்தில் 4,326 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதோடு இன்று புதிதாக 317 பேருக்கு தொற்று  உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5,345 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,786 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,497 பேர் சிகிச்சையில் உள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பொம்மிநாயக்கன்பட்டி சேர்ந்த 27 வயது முதியவர், கோவில்பட்டியை சேர்ந்த 70 வயது முதியவர், கம்பத்தை சேர்ந்த 82 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் தேனி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

 

மே மற்றும் ஜூன் மாதத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தில் மட்டும் 90 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த  உயிரிழப்பு 93 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர் பரிசோதனை முடிவு வெளிவரும் முன்பே கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இப்படி நாளுக்கு நாள் கரோனாவால் தேனி மாவட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.